பூங்காவாக பயன்படுத்தும் இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட நியூ வெங்கடேஷ் நகர் பகுதி மக்கள் அந்த பகுதியில் ஒரு இடத்தை பூங்காவாக பயன்படுத்தி வருகிறார்கள்.
அந்த இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் அமைக்க ஏற்பாடு நடந்து வருவதாக சொல்லபப்டுகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்,
குடிநீர், வாறுகால் உள்ளிட்ட வசதிகளை செய்து தராமல் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு முனைப்பு காட்டுவது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி விடுத்து வருகிறார்கள்.
