ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் சசிகலா உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை; அரசுமுடிவு

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் வி.கே.சசிகலா, டாக்டர் சிவகுமார், அப்போதைய சுகாதார துறை செயாளர் ராதாகிருஷணன், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது குற்றம் சுமத்தி விசாரணை நடத்த பரிந்துரை செய்தது.
மேலும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி, ரெட்டி, அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகனராவ், டாக்டர்கள் ஓய்.வி.சி.ரெட்டி, பாபு ஆபிரகாம் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இதை தொடர்ந்து சசிகலா உள்பட 8 பேர் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக ஆணைய அறிக்கையின் பரிந்துரை மீது சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர்கள் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
