ஜெயலலிதா மரணத்தில் குற்றம்: சசிகலா, சிவகுமார், ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.’
அந்த அறிக்கையில் சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்து விசாரணைக்கு பரிந்துரைக்கிறது. என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மேலும் டாக்டர்.ஓய்.வி.சி.. ரெட்டி மற்றும் டாக்டர்.பாபு ஆபிரகாம் ஆகியோர் மறைந்த முதல்வருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அவர்கள் பம்பாய், யு.கே. மற்றும் யு.எஸ்.ஏ. மருத்துவர்களை அழைத்து ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்வதற்கான கருத்தைப் பெற்றாலும், ஒருதனிப்பட்ட நபரின் கட்டாயத்தினால் சட்டவிரோதமாக இலக்கை அடைவதற்காக அதை வெற்றிகரமாக செயல்படுத்தினர். எனவே, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அப்போதைய தலைமை செயலாளர் டாக்டர் ராம மோகன ராவ்–ஐ பொறுத்தவரை, செயல்முனறகளுக்காக (procedural
aspects) பல்வேறு நாட்களில் 21 படிவங்களில் னகயொப்பமிடுவது குறித்து அவர் அரசுக்கு கடிதம் வாயிலாகத் தெரிவிக்கவில்லை என்பதைத் தவிர, ஆணையம் அவருக்கு எதிராக குனறகள் எதையும் காணவில்லை. நிச்சயமாக, இது ஒரு நபரால் (முக்கியஸ்தரால்) செய்யப்பட்ட மாபெரும் குற்றமாகும்; குறிப்பாக, இது முதல்வரது உயிர் தொடர்பானது என்பதால், அதற்கான வினளவுகளை நிச்சயம் பெறுவார். எனவே விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
அதே போல மருத்துவமனனயின் தலைவர் டாக்டர்.பிரதாப் சி. ரெட்டி, உண்மைகளை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்ற
நபராக இருந்தும், செய்தியாளர் சந்திப்பில் மறைந்த முதல்வர் எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்னகனய வெளியிட்டார். இரண்டாவதாக, அவர் தனது அனறயில் அடிக்கடி விளக்கக்கூட்டத்னத நடத்திய போதிலும், மனறந்த முதல்வரின் உடல்நலக்குனறவு மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்னம நிலையை வெளிப்படுத்த தவறியதால் இது விசாரிக்கப்பட வேண்டியதாக ஆணையம் கருதுகிறது.
மேற்கண்டவாறு ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
