மத்திய அரசை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம் ; இந்தி திணிப்பை எதிர்த்து கோஷம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குக்குட்பட்ட புதுக்கோட்டையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா தலைமை ,
மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர் அஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்தும் மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைக் கழக இளைஞரணி மற்றும் மாணவரணி நிர்வாகிகள், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள்,
உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
