• June 8, 2025

கோவில்பட்டி உள்பட தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; கணக்கில் வராத ரூ.1 கோடியே 12 லட்சம் பறிமுதல்

 கோவில்பட்டி உள்பட தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை; கணக்கில் வராத ரூ.1 கோடியே 12 லட்சம் பறிமுதல்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
தீபாவளியை முன்னிட்டு அன்பளிப்பு பெறுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையில் சோதனையில் கணக்கில் காட்டப்படாத 1 கோடியே 12 லட்சத்து 57 ஆயிரத்து 803 ரூபாய் கைப்பற்றப்பட்டது.
அதிகபட்சமாக திருவாரூர் நெடுஞ்சாலை துறை டிவிஷனல் என்ஜினீயர் அலுவலகத்தில் ரூ.75 லட்சம் கைப்பற்றப்பட்டது, நாமக்கல நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில்ரூ.8 லட்சத்து 87 ஆயிரம், விருதுநகர் ஊராக வளர்ச்சி துறை (பஞ்சாயத்து) அலுவலகத்தில் ரூ.6,67,500, கள்ளக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரூ.4,26,280 கைப்பற்றப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கோவில்பட்டி உப கோட்ட ஊராக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. ஹெக்டேர் தர்மராஜ் தலைமையில் சோதனை நடந்தது.


இதனால் அலுவலக வளாகம் பரபரப்புக்கு உள்ளானது. அந்த சமயத்தில் அலுவலகத்தில் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதே போல் உள்ளேயும் யாரையும் அனுமதிக்கவில்லை. சோதனை முடிவில் கணக்கில் வராத ரூ. 24,800 பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கடலூர், பெரம்பலூர், திருச்சி, வேலூர், ராமநாதபுரம், திருபூர், மதுரை, சிவகங்கை, கோவை, கரூர், சேலம், புதுகோட்டை, தருமபுரி மாவட்ட அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யபப்ட்டது,
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *