சீரடி சாய் பிளசிங் அறக்கட்டளை 5-ம் ஆண்டு விழா கோலாகலம்; முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், நடிகை லதா பங்கேற்பு

சென்னை முகப்பேர் வெள்ளாளர் தெருவில் ஸ்ரீ சீரடி சாய் பிளசிங் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன,
தனது மக்கள் பணியை வெற்றிகரமாக 4 ஆண்டுகள் நிறைவு செய்து 5-வது ஆண்டில் ஸ்ரீ சீரடி சாய் பிளசிங் அறக்கட்டளை அடியெடுத்து வைத்துள்ளது.
அறக்கட்டளையின் 5-வது ஆண்டு விழா சனிக்கிழமையன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
முகப்பேர் வெள்ளாள தெருவில் உள்ள காரிய சக்தி பிரசன்ன விநாயகர் கோவில் அருகே விழா நடந்தது.
சீரடி சாய் பிளசிங் அறக்கட்டளை அறங்காவலர் குழு தலைவர் முகப்பேர் என்.இளஞ்செழியன் தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க.அமைப்பு செயலாளருமான பா.பெஞ்சமின் விழாவை தொடக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நடிகை லதா குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து சாப்பாபா சிறப்பு அபிஷேக நிகழ்வில் பங்கேற்றார்.


விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பொதுமக்கள் மற்றும் சாய் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்,
மதுரவாயல் பகுதி அதிமுக செயலாளர் நொளாம்பூர் இமானுவேல், மூத்த பத்திரிகையாளர் துரை கருணா, தி.நகர் கமலக்கண்ணன் , லயன் பாலாஜி ,துரை சிவாச்சாரியார் , வழக்கறிஞர் முகமது அனிபா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
சீரடி சாய் பிளசிங் அறக்கட்டளை நிர்வாகிகள் துரைமுருகன் ,பாடி குமார் ,வீராசாமி , மணிமாறன், விஜயகுமார் உள்ளிட்டோர் விழாவுக்கு வருகை தந்தவர்களை வரவேற்று சிறப்பித்தனர்.
