அப்துல் கலாம் பிறந்த நாள் பேச்சுப்போட்டி ; மாணவிகளுக்கு மரக்கன்றுகள் பரிசு

கோவில்பட்டியில் புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாணவ மாணவிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அப்துல் கலாம் பற்றி பேச்சுப்போட்டி ,ஓவிய போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை புரட்சித் திலகம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முத்து கணேஷ் செய்திருந்தார், நிகழ்ச்சியில் கம்பன் கழக ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டி , மகளிர் அணி ரதிதேவி மற்றும் நிர்வாகிகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர், மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
