15-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார். பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அனைவரும் தேசிய வாக்காளர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் , கல்லூரிகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியர்கள் மற்றும் சுருக்கமுறை திருத்தத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் […]
தூத்துக்குடி கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ், குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 29 மூட்டை பீடி இலைகள் (கட்டிங் இலை)30 கிலோ எடை கொண்ட 14 மூட்டை பீடி […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் இளம்பகவத் பேசியதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் இதுநாள் வரை 25.51 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த 2024 ஆம் வருடத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரி மழை அளவு 662.20 மி.மீ-; ல் 587.78 மி.மீ கிடைக்கப்பெற்றுள்ளது. மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் […]
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவதால் எப்போதும் கூட்டம் அதிகம் இருக்கும். திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அரிப்பு அதிகரித்துள்ளது. கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில் சுமார் 200 அடி தூரத்துக்கு 8 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் அலைகளும் சீற்றத்துடன் காணப்படுகிறது. […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:- புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள 18-19 வயது வாக்காளர்களுக்கும், முகவரி மாற்றம் காரணமாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கும், நகல் அடையாள அட்டை கோரியவர்களுக்கும் வண்ண வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை விரைவு அஞ்சல் மூலம் இது வரை 16799 அனுப்பபட்டுள்ளது. மீதமுள்ள 33726 நபர்களுக்கு விரைவில் விரைவு அஞ்சல் மூலம் வாக்காளர் அடையாள அட்டை அனுப்பிவைக்கப்படும். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத, 18 வயது […]
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகினார். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார். சீமான் தன்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக அவர் […]
தமிழக ஆளுநர் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், சட்டப்பேரவையில் காலம்காலமாக கடைபிடித்து வரும் மாண்பை மீறும் வகையில் நடந்து கொள்வதாகவும், திமுக தலைமைக் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில் தூத்துக்குடியில் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாளைரோடு சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் தூத்துக்குடி மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். […]
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவில், சனி தலமாக விளங்குகிறது. சுமார் 60 வருடங்களுக்கு முன்பு வரை இக்கோவிலில் தேரோட்டம் நடந்துள்ளது. காலப்போக்கில் தேரோட்டம் நின்றுபோய்விட்டது. இதனால் இங்குள்ள தேர் அப்படியே ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது. .இந்த தேரில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் காலத்து சிற்பங்களான பெருமாள், தட்சிணாமூர்த்தி, பிரதோஷ மூர்த்தி, கஜலெட்சுமி, யாழி, பசு பால் கொடுக்கும் சிவலிங்கம், அரசனின் உருவங்கள், யானை பயிற்சி உருவங்கள், பூதகணங்கள், கோவில் […]
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில், அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தயம் நடைபெற்றது, தருவை விளையாட்டு மைதானத்தில் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து ஆரம்பித்து ஜார்ஜ் ரோடு, பெல் ஹோட்டல் கார்னர், ரோச் பூங்கா, பீச் ரோடு ரெயில்வே கேட் வரை சென்று மீண்டும் அதே […]
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய போலீசார் துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு கொலையை தடுத்து நிறுத்தி, காயமடைந்தவரை காப்பாற்றிய சாதனைக்காக டி.ஜி.பி.சங்கர்ஜிவால் நேரில் பாராட்டினார். கடந்த டிசம்பர் 27 அன்று திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் உள்ள முக்காணி பகுதியில் குடும்ப தகராறில் சுயம்புலிங்கம் (38) என்பவர் மீது அவரது உறவினர்களான நாராயணன் (38) மற்றும் மாரியப்பன் எனும் பெரிய முண்டன் (38) ஆகியோர் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்அப்போது ரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் பாஸ்கரன், தலைமை […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
