தூத்துக்குடியில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி;மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்

15-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார். பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அனைவரும் தேசிய வாக்காளர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் , கல்லூரிகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவியர்கள் மற்றும் சுருக்கமுறை திருத்தத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ரவிச்சந்திரன் சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சேதுராமலிங்கம், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன்பாண்டியன், அலுவலக மேலாளர் (பொது) ரகு, துணை ஆட்சியர் பயிற்சி சத்யா, மாவட்ட பொது விளம்பர தூதர் தேவராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளி விளம்பரதூதர் தனேஷ் கனகராஜ் மற்றும் மாணவ மாணவியர்கள் அரசு அலுவவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
