தூத்துக்குடியில் நெடுந்தூர ஓட்டப்பந்தயம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில், அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தயம் நடைபெற்றது,
தருவை விளையாட்டு மைதானத்தில் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து ஆரம்பித்து ஜார்ஜ் ரோடு, பெல் ஹோட்டல் கார்னர், ரோச் பூங்கா, பீச் ரோடு ரெயில்வே கேட் வரை சென்று மீண்டும் அதே வழியில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நிறைவு பெற்றது.
இந்த பந்தயத்தில் மாணவ, மாணவிகள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் முதலிடம் பெற்றவருக்கு ரூ.5000, இரண்டாமிடம் பெற்றவருக்கு ரூ.3000, மூன்றாமிடம் ரூ.2000, நான்காமிடம் முதல் பத்தாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.1000 பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
