கோவில்பட்டி வேலாயுதபுரம் தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் சுதந்திரதின விழா நிகழ்ச்சி குழந்தைகள் நல மையத்தில் நடைபெற்றது.விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கான மாறுவேடப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நற்பணி மன்ற மாவட்ட துணை தலைவரும் கவுன்சிலருமான தவமணி , கவுன்சிலர் லவராஜா ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள். வேலாயுதபுரம் மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார்நிகழ்ச்சியில் வைரசாமி நாடார், ஜெயமாரியப்பன், சிலம்பம் ஆசிரியர்கள் கணபதி, சோலை நாராயணன், தினேஷ், கனகலட்சுமி, […]
கோவில்பட்டி நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி கொடியேற்றி சிறப்புரையாற்றினார். விழாவிற்கு ஆணையாளர் ராஜாராம் தலைமை வகித்தார், நகர மன்ற துணைத் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் முன்னிலை வகித்தார்.நகராட்சி பொறியாளர் ரமேஷ், நகராட்சி சுகாதார அலுவலர் நாராயணன், மேலாளர் பெருமாள், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், கணேசன், வள்ளி ராஜ், […]
இந்திய சுதந்திரதின விழாவை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் சம்பந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க.வினரும். நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் தி.மு.க.வினரும் கலந்து கொண்டனர். வழக்கமாக இரு கட்சி நிர்வாகிகள் ஒரு இடத்தில் கலந்து கொண்டால் மோதல்உருவாக்கி பரபரப்பு ஏற்படுவது வழக்கம், ஆனால் இன்றைய சம்பந்தி விருந்து நிகழ்ச்சியில் இரு கட்சியினரும் கலந்து கொண்டாலும் எந்த வித மோதலும் இல்லாமல் அமைதியுடன் நடந்து கொண்டார்கள். […]
கோவில்பட்டி மதுவிலக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள தெருவுக்கு இன்று வீர சாவர்க்கர் தெரு என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் தெருவின் ஒரு கட்டிட சுவரில் நகராட்சி என்று குறிப்பிட்டு வீரசாவர்க்கர் தெரு என்று எழுதி பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது.சுதந்திரதினமான இன்று ஒரு தெருவில் சுதந்திர போராட்ட வரலாற்றில் இடம்பெற்ற ஒருவரின் பெயர் இருந்ததால் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று அந்த பகுதி மக்கள் கருதினார்கள். ஆனால் அது நகராட்சி சார்பில் எழுதப்படவில்லை, […]
2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 27 தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றும் எம்.சுதேசன் பெயர் இடம் பெற்றுள்ளது.போலீஸ் சேவையில் எந்தவித குறைபாடு மற்றும் புகார்கள் இன்றி செயல்படுதல், கோர்ட்டு மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தல், சட்டம் -ஒழுங்கு பராமரித்தல் போன்ற பணிகளுக்காக ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகிறது.இந்த விருது பெற இருக்கும் இன்ஸ்பெக்டர் சுதேசன், […]
கோவில்பட்டி வட்டார நூலகத்தில் 75 வது சுதத்திர தின பவள விழா நடைபெற்றது. வாசகர் வட்டத் தலைவர் ரவீந்தர் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.நூலகப் புரவலர் முத்துப்பாண்டியன், தலைமை ஆசிரியர் பணி ஓய்வு உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார நூலகர் அழகர்சாமி அனைவரையும் வரவேற்றார்.சுதந்திர தினஅமுதப் பெருவிழாவை முன்னிட்டு 14.8.22 அன்று பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கட்டுரை, ஒவியம், வண்ணம் தீட்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்குசிறப்பு விருந்தினர் சுவீடன் நாட்டு வானொலி […]
கோவில்பட்டி மில் தெருவில் உள்ள நகராட்சி ஆரம்பப்பள்ளியில் வைத்து 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது, இது கோவில்பட்டி ரோட்டரி கிளப்பின் தத்தெடுத்த பள்ளியாகும். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை தலைமையாசிரியை ராஜசரஸ்வதி வரவேற்று பேசினார், ரோட்டரி கிளப் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி நிகழச்சியில் விநாயகா ரமேஷ் , நாராயணசாமி, பரமேஸ்வரன், சீனிவாசன் , பூல் பாண்டியன், கிருஷ்ணமூர்த்தி, என்ஜினியர் நாராயணசாமி, ரமேஷ் குமார், மாரியப்பன் சுரேஷ் மாரிச்சாமி ,முத்து […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வீரமாமுனிவர் பங்கு தந்தையாக பணியாற்றிய சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்தின் விண்ணேற்பு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி விழா நடத்தப்பட்டது.கொரோனா தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, இந்த ஆண்டு ஆலயத்தில் விண்ணேற்பு […]
தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சிமன்ற தலைவர்கள் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றினார்கள். கோவில்பட்டி வில்லிசேரி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு உள்ள கொடிகம்பத்தில் தேசிய கொடியை ஊராட்சி மன்ற தலைவர் ப.வேலன் ஏற்றி மரியாதை செலுத்தினார்.இந்த விழாவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் காசிராஜன், உறுப்பினர்கள், கோவில்பட்டி தொகுதி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவர்க்கும் இனிப்பு […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் கொண்டைய ராஜு ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் சார்பில் 75 வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு ஓவிய பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. கோவில்பட்டி சவுபாக்கியா மஹாலில் நடந்த இந்த பயிற்சி பட்டறையில் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து பள்ளி மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஓவிய பயிற்சி பெற்று ஓவியங்களை வரைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார்.ரோட்டரி மாவட்ட […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
