• June 7, 2025

கோவில்பட்டி நகராட்சியில் சுதந்திர தின விழா

 கோவில்பட்டி நகராட்சியில் சுதந்திர தின விழா

கோவில்பட்டி நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி கொடியேற்றி சிறப்புரையாற்றினார். விழாவிற்கு ஆணையாளர் ராஜாராம் தலைமை வகித்தார், நகர மன்ற துணைத் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் முன்னிலை வகித்தார்.
நகராட்சி பொறியாளர் ரமேஷ், நகராட்சி சுகாதார அலுவலர் நாராயணன், மேலாளர் பெருமாள், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், கணேசன், வள்ளி ராஜ், காஜா, வருவாய் ஆய்வாளர் பிரேம்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *