சுதந்திரதின விழாவில் மாறுவேடபோட்டி

கோவில்பட்டி வேலாயுதபுரம் தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் சுதந்திரதின விழா நிகழ்ச்சி குழந்தைகள் நல மையத்தில் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கான மாறுவேடப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நற்பணி மன்ற மாவட்ட துணை தலைவரும் கவுன்சிலருமான தவமணி , கவுன்சிலர் லவராஜா ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள். வேலாயுதபுரம் மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார்
நிகழ்ச்சியில் வைரசாமி நாடார், ஜெயமாரியப்பன், சிலம்பம் ஆசிரியர்கள் கணபதி, சோலை நாராயணன், தினேஷ், கனகலட்சுமி, சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்,
