முதல்-அமைச்சர் தனிப்பிரிவிற்கு, கரிசல்பூமி விவசாய சங்கத் தலைவர் வரதராஜன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்டாசி ராபி பருவத்திற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் சில கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளுக்கு உரம் வந்துள்ளது.இதற்கிடையில் கடந்த சில வாரங்களாக கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் தஞ்சாவூர், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து சில வியாபாரிகள் முகாமிட்டு, அந்த உரத்திற்கு இணையாக இருப்பதாக கூறி, இயற்கை கடல் பாசி […]
கோவில்பட்டி இல்லத்து பிள்ளைமார் திருமண மகாலில் இன்று காலை 9 மணிக்கு இலவச கண் பரிசோதனை முகாம் தொடங்கியது. மதியம் 2 மணி வரை நடக்கிறது.இல்லத்து பிள்ளைமார் இளைஞர் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைத்து நடத்திய இந்த முகாமில் கண் நோயாளிகளுக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் நீர் அழுத்த நோய் பரிசோதனை செய்யப்பட்டது. கண் டாக்டர்கள் ஜெயப்பிரியா, ஸ்ரீதர் ஆகியோர் இந்த சோதனையை நடத்தினார்கள். இம்முகாமில் கண் மருந்து இலவசமாக வழங்கப்பட்டது. கண் கண்ணாடிகள் […]
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் துவரந்தை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி இவர் தனது மனைவி கிருஷ்ணவேணி (24) மற்றும் 3 குழந்தைகளுடன் கடந்த 26.6.2022 அன்று இரவு இருசக்கர வாகனத்தில் புதியம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினார்.குளத்தூர் – வேம்பார் கடற்கரை சாலை சுப்பிரமணியபுரம் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கருப்பசாமி ஓட்டி வந்த வாகனத்தை மடக்கி கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க […]
கோவில்பட்டி சவுபாக்கியா மகாலில் இன்று காலை ம/தி.மு.க.தொண்டர் ராம்குமார் ரவி-லட்சுமி திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.திருமண விழாவில் ம.தி.மு.க.பொதுசெயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார், அவர் பேசுகையில், “மணமக்கள் ஒற்றுமையாக தாய், தந்தையருக்கு பெருமை சேர்க்கும் வகையில் வாழ வேண்டும்” என்று குறிப்பிட்டார்.தனது பேச்சின் இறுதியில் வைகோ, “செப்டம்பர் 15 அண்ணா பிறந்ததினம் வருகிறது. ம.தி.மு.க/தொண்டர்கள் உறுப்பினர் சேர்ப்பு பணியில் தீவிரம் காட்டவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.திருமணவிழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தி.மு.க. நகர செயலாளர் பால்ராஜ், […]
முழு முதல் கடவுளாக விளங்குபவர் விநாயகர். கணங்களின் தலைவனாக விளங்கும் கணபதி அவதரித்த தினம் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் இந்தாண்டு வருகிற 31-ந்தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடக்கூடிய ஒரு சில முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. கணபதிக்கு பிடித்த கொழுக்கட்டை, பழங்கள் உள்ளிட்ட பல பதார்த்தங்களைப் படைத்து வழிபடுவது வழக்கம்.விநாயகர் சதுர்த்தி என்றாலே விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துவிடும். […]
தென்மாவட்டங்களில் அதிக பயணிகள் வந்து செல்லும் ரெயில் நிலையங்களில் கோவில்பட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு 2 பிளாட்பாரங்கள் உள்ளன. பழைய பிளாட்பாரமான முதல் பிளாட்பாரத்தில் திருநெல்வேலி மார்க்கமாக செல்லவேண்டிய ரெயில்கள் வந்து செல்கின்றன.புதிதாக அமைக்கப்பட்ட இரண்டாவது பிளாட்பாரத்தில் விருதுநகர் மார்க்கமாக செல்லும் ரெயில்கள் வந்து செல்கின்றன. இந்த பிளாட்பாரத்தில் போதுமான வசதிகள் இன்னும் செய்து தரப்படவில்லை. தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது.மிக முக்கியமாக நிழற்குடைகள், பயணிகள் அமரக்கூடிய இருக்கைகள் கிடையாது. ரெயில் வரும்போது எந்த நம்பர் […]
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ.194.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துஆ துறை கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது.சென்னையில் நடைபெற்ற விழாவின்போதுமுதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கட்டிடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும் மருத்துவ கருவிகளை பயன்பாட்டிற்காக வழங்கினார். மேலும் 236 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் ஸ்டாலின் வழங்கினார். அந்த வகையில் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1.35 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனைக்கான […]
கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் முன்னாள் ராணுவத்தினர் நல உதவி மையம் மற்றும் ராணுவ வீரர்களின் நினைவிடம் உள்ளது. அதன் அருகில் சாலையோரம் வாகை மரம் இருந்தது. மரத்தை தாண்டி உரிமையியல் நீதிபதி குடியிருப்பு பகுதி உள்ளது.இந்த் சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது, எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் இருந்த இந்த மரம் பகல் 12 மணி அளவில் திடீர் என சாய்ந்து விழுந்தது. நல்லவேலையாக அந்த சமயத்தில் பஸ் நிறுத்தத்தில் யாரும் இல்லை. சாலையை கடந்து […]
கோவில்பட்டியை அடுத்துள்ள திட்டங் குளம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் பொன்ராஜ் (வயது67). இவர் கடந்த 22-ம் தேதி தனது தோட்டத்தில் இருந்த போது வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பா.ஜனதா கட்சி நிர்வாகி மற்றும் ஒருவரை கோவில்பட்டி கிழக்கு போலீசார் கைது செய்தனர்.இந்த நிலையில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ் வீட்டிற்கு இன்று சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த […]
கோவில்பட்டி ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இலக்குமி ஆலை மெட்ரிக் பள்ளி முதல்வர் கார்த்திகேயன், அருட்சகோதரி அமலி ஆகியோர் கண்காட்சியை திறந்து வைத்தனர், பள்ளிமுதல்வர் அருட்சகோதரி தயா முன்னிலை வகித்தார்.அறிவியல் கண்காட்சியில் உண்ணாமலை என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு இயற்கை காற்றோட்டம் மாறும் பொறியியல் தொடர்பான கருத்துக்களை எடுத்துரைத்தனர். பரிமளா நர்சிங் கல்லூரி மாணவர்கள் மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினார்கள்.1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ஏறக்குறைய 6௦௦ […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
