கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்
கோவில்பட்டி இல்லத்து பிள்ளைமார் திருமண மகாலில் இன்று காலை 9 மணிக்கு இலவச கண் பரிசோதனை முகாம் தொடங்கியது. மதியம் 2 மணி வரை நடக்கிறது.
இல்லத்து பிள்ளைமார் இளைஞர் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைத்து நடத்திய இந்த முகாமில் கண் நோயாளிகளுக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் நீர் அழுத்த நோய் பரிசோதனை செய்யப்பட்டது. கண் டாக்டர்கள் ஜெயப்பிரியா, ஸ்ரீதர் ஆகியோர் இந்த சோதனையை நடத்தினார்கள். இம்முகாமில் கண் மருந்து இலவசமாக வழங்கப்பட்டது. கண் கண்ணாடிகள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு சங்கத்தின்தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். நகராட்சி கவுன்சிலர் முத்துராஜ் தொடக்கி வைத்தார். நகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ், சண்முகவேல், புதுக்கிராமம் வியாபாரிகள் சங்க தலைவர் ரமேஷ், வள்ளி கிருஷ்ணா பில்டர்ஸ் தனசேகரன், சூர்யா பார்மசி வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.