ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.க.வில் சேர்ந்தால் எங்களுக்கு கவலையில்லை; டி.ஜெயக்குமார் அதிரடி பேட்டி
சென்னையில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரான முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டியின் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு. கேள்வி:- சேலம் பெரியார் பல்லைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுக்கான கேள்வியில் நான்கு சாதிகளைக் குறிப்பிட்டு இதில் எந்த சாதி தாழ்ந்த சாதி என்று கேட்டுள்ளார்களே?பதில்.:-.இதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஜாதி, மதம், மொழி இவை அனைத்தையும் கடந்தது தான் கல்வி நிறுவனமாக இருக்கவேண்டும். அது எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி. உயர்க்கல்வித்துறை எந்த […]