• June 8, 2025

அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் ஆனார் கடம்பூர் ராஜூ; கூடுதல் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்

 அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் ஆனார் கடம்பூர் ராஜூ; கூடுதல் நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்

எடப்பாடி பழனிசாமியை தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் கடம்பூர் ராஜூ சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அ.தி.மு.க.இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கழக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி.பொன்னையன், நத்தம் இரா.விசுவநாதன் , எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அ.தி.மு.க. கூடுதல் தலைமைக்கழக செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.
துணை பொதுசெயலாளர்கள்- கே.பி.முனுசாமி, நத்தம் இரா.விசுவநாதன்.
அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர்- சி.பொன்னையன்.
கழக தலைமைநிலைய செயலாளர்- எஸ்.பி.வேலுமணி
அமைப்பு செயலாளர்கள்- செல்லூர் கே.ராஜூ, சி.வி.சண்முகம், ப.தனபால், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் சி,ராஜூ . கே.டி,.ராஜேந்திரபாலாஜி, பா.பென்ஜமின், வி.வி.ராஜன் செல்லப்பா, நா.பாலகங்கா.
மேற்கண்டவாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *