கொரோனா பாதிப்பு: மு.க.ஸ்டாலின், மருத்துவமனையில் அனுமதி

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கொரோனா அறிகுறி காரணமாக பரிசோதனை செய்து கொண்டார். இதில் கொரோன உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திகொண்டார்.
இது பற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அத்துடன் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று கேட்டுகொண்டிருந்தார்
இந்த நிலையில் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,” தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், , கோவிட் அறிகுறிகளுக்கான ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.
