• June 8, 2025

சிறையில் உள்ள மகளுக்கு கஞ்சா கொண்டு சென்ற தாய் கைது

 சிறையில் உள்ள மகளுக்கு கஞ்சா கொண்டு சென்ற தாய் கைது

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த சுசீலாமேரி, திண்டுக்கல் நகர் தெற்கு போலீசாரால் கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரை பார்க்க வந்த தாய் பாத்திமா மேரியை, சிறை காவலர்கள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 120 கிராம் எடை மதிப்புள்ள 17 பொட்டலங்கள் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கஞ்சா அவரது மகளுக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது,
இதனையடுத்து
பாத்திமாமேரி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கரிமேடு காவல் நிலையத்தில் சிறைத்துறையினர் ஒப்படைத்தனர். இதனையடுத்து பாத்திமா மேரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *