மக்களின் மனநிலையை பிரதிபலித்து ஆட்சி நடத்தியவர் காமராஜர்- டி.ஜெயக்குமார் புகழாரம்

சென்னையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அ,தி,,மு.க.தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் டி,ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.வருமாறு:-
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு. அந்த வரிகளுக்கு ஏற்ப பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்தார். தான் படிக்கவில்லை என்றாலும்கூட கல்வி என்பது ஒரு சமுதாயத்திற்கு மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து அதன் அடிப்படையிலே கல்வியை மேம்படுத்தவேண்டும் என்பதற்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்தது மட்டுமல்லாமல்,கல்வி மேம்பாடு அடையவேண்டும் என்பதற்காக பல்வேறு சாதனைகளை எல்லாம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
அதனால்தான் கல்விக் கண் திறந்தவர் என்று சொன்னால் நாம் பட்டென்று சொல்லக்கூடிய பெருந்தலைவர் காமராஜரைத் தான் நாம் சொல்ல முடியும். காமராஜரை பற்றி நாம் சொல்லவேண்டும் என்றால் எந்த அளவுக்கு மக்களின் எண்ணங்களை உணர்ந்த ஒரு பெருந்தலைவர் அவர். இப்போது மருத்துவ கல்விக்கு கோட்டா இல்லை. அப்போது மருத்து ஒதுக்கீட்டிற்குக் கோட்டாக்கள் உண்டு. அந்த காலத்தில் முதலமைச்சருக்கு 10 அல்லது 20 சீட்களை அளிப்பார்கள். யாருக்கு ,இந்த சீட்டை வழங்குவது என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழம்பி கொண்டிருந்தார்கள். என்ன செய்வது, யாரைத் தேர்வு செய்வது அப்படி என்ற ஜயப்பாட்டில் இருக்கும்போது பெருந்தலைவரிடம் வந்து சொல்கிறார்கள்.
உடனே பெருந்தலைவர் அந்த விண்ணப்பங்களை எல்லாம் எடுத்துவர கூறினார். 10 நிமிடத்தில் பெருந்தலைவர் இவர்கள் அனைவருக்கும் தேர்வு செய்யப்பட்டதாக அவர்களிடம் அளித்துவிடுங்கள் என்று கூறிவிட்டார். அதிகாரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் குழம்பி கொண்டிருந்தபோது உடனடியாக இவர் எப்படி இந்த முடிவை எடுக்க முடிந்தது என்று வியப்படைந்தனர். அந்த விண்ணப்பங்களைப் பார்க்கும்போது அந்த மாணவர்களின் பெற்றோர்கள் படிக்காதவர்கள். எல்லோரும் அந்த விண்ணப்பத்தில் கைநாட்டு வைத்திருந்திருந்தார்கள். தான் படிக்கவில்லை என்றாலும்கூட அந்த குடுபத்தில் ஒருவர் மருத்துவராக வரவேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் நடந்துகொண்டார்.
அடுத்தவர் மனநிலையிலிருந்து பார்ப்பவர்கள்தான் மாபெரும் தலைவராக வர முடியும்,. தமிழகத்தில் மக்களின் மனநிலையை பிரதிபலித்து ஆட்சி நடத்தியவர் காமராஜர். அதனால்தான் இன்றைக்கும் பெருந்தலைவர் என்று எல்லோராலும் பாராட்டப்படுகிறார்.
இவ்வாறு டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
