கோவில்பட்டியில் காமராஜர் ஓவியத்தை சுற்றி 120 அகல் விளக்குகள் ஏற்றி மாணவிகள் மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்தநாள் விழா இன்று கோவில்பட்டியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மெயின் ரோட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதனால் அந்த பகுதி காலை நேரத்தில் பரபரப்புடன் கானப்பட்டது. .நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 12௦ பேர், காமராஜரின் 120 வது வயதை குறிக்கும் வகையில் வெட்டி-சட்டை அணிந்து காமராஜர் வேடத்தில் ஊர்வலம் வந்தனர் மற்ற மாணவ, மானவிகள் பள்ளி சீருடை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

பள்ளிகூடம் முன்பிருந்து ஊர்வலம் தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காமராஜரின் சிலை அருகே முடிவடைந்தது. அங்கு காமராஜர் சிலைக்கு பள்ளிகூட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து மானவர்கள் மறுபடியும் ஊர்வலமாக பள்ளிக்கூடம் சென்றனர்.
பள்ளிக்கூடத்தில் காமராஜரின் ஓவியம் வரையப்பட்டிருந்தது, ஓவியத்தை சுற்றி 120 அகல் விளக்குகள் ஏற்றி மானவிகள் மரியாதை செலுத்தினர்.
மேலும் பள்ளியில் புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனி செல்வம் தலைமை தாங்கினார்.
பள்ளி செயலாளர் கண்ணன், வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை திறந்து வைத்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செல்வராஜ், ராஜேந்திர பிரசாத், நகரசபை துணை தலைவர் ரமேஷ், நாடார் மேல்நிலைப்பள்ளி குழு உறுப்பினர் ராம்குமார், வட்டார வள பயிற்றுநர் தனலட்சுமி, ஐ.சி.எம் பள்ளி உறுப்பினர் அமலி பிரகாஷ், நாடார் நடுநிலைப்பள்ளி பொருளாளர் ஐயப்பன், உறுப்பினர்கள் மணிக்கொடி, ராமசாமி,ராஜா அமரேந்திரன், பொன் ராமலிங்கம், ஆசிரியர்கள் மீனா, கணேசன், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார்.
