காமராஜர் பிறந்தநாள்; சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்தனர்

கோவில்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் 120 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
வேலாயுதபுரம் பகுதியில் நடந்த விழாவுக்கு கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரைராஜ், செயற்குழு உறுப்பினர் பிச்சைக்கனி, ஐ.ஏன்.டி.யு.சி.ராஜசேகரன், ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவர் அணி தலைவர் பிரபு வரவேற்று பேசினார்,

விழாவில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ஏ.கே. மாறன் கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்புரையாற்றினார். காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் திருப்பதி ராஜா, மாவட்ட பொதுசெயலாளர் முத்து, மாவட்ட மனித உரிமை துறை தலைவி ஆஷா, கோவில்பட்டி தொகுதி தலைவர் சுடலை மணி, நகர பொது செயலாளர்கள் தாஸ், சசி குமார், நல்ல மதி, நகர துணை தலைவர் கிறிஸ்துராஜா, மனித உரிமை துறை மாவட்ட துணை தலைவர் காளிதாஸ், நகர செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வியாகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவின்போது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது
