தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட தெற்கு சிலுக்கபட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி கிராமத்தை சுற்றி வீட்டு மனை மற்றும் விவசாய நிலம் சுமார் 2,200 ஏக்கர் தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டது.இதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மாவட்ட பதிவாளரை தொடர்பு கொண்டு பேசினார்.இதை தொடர்ந்து நடந்த விசாரணையில் பத்திரபதிவில் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டது. […]
இலங்கையில் 75 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் பொருளாதாரம் முற்றிலுமாய் சீர்குலைந்தது. அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து, இறக்குமதிக்கும் வழியில்லாமல் போனது.இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியானது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேவே காரணம் என்று கூறும் அங்குள்ள மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், அதில் எந்தவொரு பலனும் அளிக்கவில்லை. இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் கொழும்பு உள்ளிட்ட […]
தென்காசி அருகே உள்ள இலஞ்சியை சேர்ந்தவர் கோட்டை மாடன் (வயது 82). சொத்து தகராறில் இவர் கடந்த 4-ந் தேதி அவருக்கு சொந்தமான தோப்பில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கோட்டை மாடனின் மூத்த மகள் மைதீன் பாத்து என்பவரின் கணவர் பரமசிவன், கடைசி மகள் ஸ்ரீதேவி மற்றும் வசந்தகுமார், மகேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான சேகர் என்பவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை […]
சார்ஜாவில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் உகாண்டா நாட்டை சேர்ந்த எளி ஜேம்ஸ் ஒப்பி(வயது 21) என்பவர் வந்தார். இவரது நடவடிக்கையை கண்ட அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உகாண்டா வாலிபரை நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். சுற்றுலா வந்ததாக கூறி முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரது உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்த போது எதுவும் இல்லை. பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது […]
ரெயில் நிலையங்களில் முன்பதிவற்ற பயணச்சீட்டுகள் பெறுவதில் உள்ள கூட்ட நெரிசலை தவிர்க்க, மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் ரெயில் பயணச்சீட்டு தானியங்கி எந்திரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் பணமில்லா பரிமாற்றம் மூலம் ரெயில் பயண சீட்டு வழங்குவதற்கான தானியங்கி எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்த எந்திரங்களில் ஸ்மார்ட் கார்டு மற்றும் பண மதிப்பை செலுத்தி பயணச்சீட்டு பெறப்பட்டு வந்தது. தற்போது புதிய முயற்சியாக பணமில்லா பரிமாற்றம் மற்றும் […]
மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழகத்தில் கஞ்சா விற்பனையை அடியோடு தடுக்க நடவடிக்கை எடுக்கபப்ட்டு வருகிறது. தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது இனிமேல் குற்ற விசாரணையுடன் நிதி குறித்த விசாரணையும் நடத்தப்படும்.அவர்களின் வங்கிக்கணக்கு மட்டுமல்லாது சொத்துக்களும் முடக்கப்படும். மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை அவ்வாறு 11 பேரின் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் […]
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்ராயிருப்பு பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்தநிலையில், வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நாளை முதல் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. நாளை 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதி வழங்கப்பட்ட […]
அரியானா முன்னாள் முதல்-மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலா. பள்ளிப் படிப்பை நிறைவு செய்யாத சவுதாலாவுக்கு, 10-ம் வகுப்பு ‘பாஸ்’ செய்துவிட வேண்டும் என்பது ஏக்கம்.ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி திகார் சிறையில் இருந்த சவுதாலா, அங்கிருந்தபடியே கடந்த 2017-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார். ஆனால் ஆங்கிலப் பரீட்சை மட்டும் எழுதவில்லை. அதனால், சவுதாலா கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்வையும் எழுதியபோதும் அதன் முடிவை அரியானா பள்ளிக் கல்வி வாரியம் […]
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் அருகே உள்ள சுன்னப்பள்ளி பகுதியில் மீனவர்கள் நேற்று மாலை ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தங்க நிறத்திலான தேர் கடலில் மிதந்து கொண்டு இருந்தது.தூரத்தில் பார்க்க கோவில் மிதந்து வருவதுபோல் இருந்ததை கண்டு மீனவர்கள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் அருகே சென்று பார்த்தபோது தங்க முலாம் பூசப்பட்ட தேர் என தெரிய வந்தது. தேரில் ஆட்கள் யாரும் இல்லை. இதையடுத்து மீனவர்கள் அந்த தேரை தங்களது படகில் கட்டிக் கொண்டு சுன்ன பள்ளி கடற்கரைக்கு […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் வெகுண்டெழுந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் போராட்டத்துக்கு அடிபணிந்து பிரதமர் பொறுப்பில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினர்.இதையடுத்து, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது. மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன.இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பேருந்துகளுக்கு தீ வைக்கும் […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022