இரும்பு பெட்டியில் ரூ.5600 கோடி முறைகேடு ஆவணங்கள்: கவர்னருடன் அண்ணாமலை சந்திப்பு

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் , பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் இணைந்து இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.க்கள் மற்றும் குடும்பம் செய்த ரூ.5600 கோடி மதிப்பிலான 3 முறைகேடுகள் தொடர்பான பினாமி ஆவணங்கள் அடங்கிய ஆவணங்களுடன் தி.மு.க. பைல்ஸ் 2 குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி மனு ஒன்றை அளித்து உள்ளோம் என கூறி உள்ளார்.
ஆவணங்களை இரும்பு பெட்டியில் வைத்து கவர்னரிடம் அண்ணாமலை வழங்கினார்,
