கோவில்பட்டியில் நாளை ஓவிய போட்டி; மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தில் நாளை வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் ஓவியமணி சி.கொண்டையராஜூ 47-வது நினைவு தினத்தை முன்னிட்டு கொண்டையராஜூ ஆர்ட் பவுண்டேஷன் சார்பில் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது.
எல்.கே.ஜி., யு.கே.ஜி.மாணவர்களுக்கு உனக்கு பிடித்த பழம், 2-வது வகுப்பு மாணவர்களுக்கு அழகிய பூ (இலையுடன்), 4,5ம் வகுப்பு மானவர்களுக்கு நமது தேசிய பறவை, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு காட்டு விலங்கு, 9,10 ம் வகுப்பு மாணவர்களுக்கு இளங்காலை பொழுது இயற்கை காட்சி, 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய தலைவர் ஓவியம் வரைய வேண்டும்.
ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டிக்குரிய சார்ட் அட்டைகளும், உபகரணங்களும் மாணவர்களே கொண்டு வர வேண்டும்.
இந்த ஓவிய போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு முன்னாள் அறங்காவலர் திருப்பதிராஜா தலைமை தாங்குகிறார். தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் கே.பி.ராஜகோபால் முன்னிலை வகிக்கிறார். கொண்டையராஜூ உருவபடத்தை ஓவியர் சிவசுப்பிரமணியன் திறந்து வைக்கிறார். ஓவியர் முருகபூபதி வரவேற்று பேசுகிறார்.
தூத்துக்குடி சாரா கலை பயிற்சி பள்ளி இயக்குனர் ஷாநவாஸ் விளக்க உரையாற்றுகிறார். ஓவிய போட்டியை தொகுப்பாளர் கார்த்திகை செல்வம் தொடங்கி வைக்கிறார். போட்டியில் வெற்றி பெறுகிறவர்களுக்கு சித்ராலயம் ஆர்ட் காலரி ஜெயக்குமார் பரிசுகள் வழங்குகிறார். கலை இலக்கிய பெருமன்றம் மாநில தலைவர் டாக்டர் அறம், திருநெல்வேலி சித்திரசபை ஓவியர் பொன் வள்ளிநாயகம் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
