ஆர்.சி மேல்நிலைப்பள்ளியில் 77 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

கோவில்பட்டி ஆர்.சி மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழச்சி தாளாளர் அருட்தந்தை சார்லஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் ஏஞ்சலா சின்னத்துரை முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் அலெக்ஸ் ஜான் வரவேற்று பேசினார்
.கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி பங்கேற்று 34 மாணவிகளுக்கும் , 44 மாணவர்களுக்கும் அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் உமாமகேஸ்வரி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
