சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவுநாள்; கோவில்பட்டியில் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவர் வாஞ்சிநாதன். தற்போதைய தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பிறந்தவர். வாஞ்சி என்று பிரபலமாக அறியப்பட்டவர், 1911 ஜூன் 17 அன்று மணியாச்சி ரெயில் நிலையத்தில் அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ராபர்ட் ஆஷ் என்ற ஆங்கிலேயரை சுட்டுப் படுகொலை செய்தார். பின்னர் தான் கைது செய்வதைத் தவிர்க்க வாஞ்சிநாதன் தற்கொலை செய்து கொண்டார்..

இந்த சம்பவமானது இந்திய சுதந்திர இயக்கத்தின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாகும்.
ஆஷ் இந்திய சுதந்திர இயக்கத்தை நசுக்கியதாகவும், இந்தியர்களுக்கெதிராக வன்முறையைப் பயன்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டதாலும், அதற்கு பழி வாங்கவே இதை செய்தார் என ஆவணங்கள் கூறுகின்றன.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவுநாள் இன்று (ஜூன் 17) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டியில் அவரது திருவுருவப்படத்திற்கு இந்தியக்கலாச்சார நட்புறவு கழகம், காயத்ரி திருமண மண்டபம் நிர்வாகிகள் சார்பாக வாஞ்சிநாதன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் இந்தியக்கலாச்சார நட்புறவு கழக மாநில செயலாளர் தமிழரசன், மாவட்ட துணை செயலாளர் அபிராமி முருகன், ஒய்எம்சிஏ தலைவர் ஆம்ஸ்ட்ராங், ரோட்டரி சங்க நிர்வாகி ரவிமாணிக்கம், எச்.எம்.எஸ். தலைவர் வினோபா, மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், பகத்சிங் ரத்ததானக்கழகம் காளிதாஸ்,லட்சுமணன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் நல்லையா, மோகன், ஆவல்நத்தம் லட்சுமணன்,

மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார், ஜெகநாதன், கணேஷ்குமார், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில்குமார், டூ வீலர் மெக்கானிக் அசோசியேஷன் தலைவர் ஜீவா, திருமண மண்டப நிர்வாகிகள் லட்சுமிநாராயணன், சாஸ்தா, ராமானுஜம், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு மேரிஷீலா, விடிவெள்ளி அறக்கட்டளை இயக்குனர் ஷீலாஜாஸ்மின், நடராஜபுறம் தெரு நலவாழ்வு இயக்க தலைவர் செண்பகம், ஔவையார் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
