கோவில்பட்டி தலைமை ஆசிரியர், பைக் விபத்தில் பரிதாப சாவு

கோவில்பட்டி, முத்து நகரைச் சேர்ந்தவர் அருள் அய்யா மகன் ஐசக் தேவராஜ் (வயது 56), இவருக்கு ஜான்சி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவர் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் அருகே கே.கைலாசபுரத்தில் உள்ள டி.டி.டி.ஏ. நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

கோவில்பட்டியில் இருந்து தினமும் ஐசக் தேவராஜ் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கூடம் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று காலையில் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில், தான் வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்துக்கு சென்றார்.

கோவில்பட்டியில் முத்துநகரில் இருந்து புறப்பட்டு கண்ககொண்டான் நோக்கி ஐசக் தேவராஜ் சென்றபோது, வில்லிசேரி அருகே எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். எதிரே வந்த எதிரே வந்த தனியார் பள்ளிகூட வேன் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த ஐசக் தேவராஜ் மீட்கப்பட்டு கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா தேவி வழக்கு பதிவு செய்து, பள்ளிகூட வேனை ஓட்டி வந்த கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
