• June 7, 2025

தி. மு. க. ஆட்சி மீதான அதிருப்தியை திசை திருப்ப கொடநாடு விவகாரத்தை எடுத்துள்ளனர் ; டி. ஜெயக்குமார் குற்றச்சாட்டு

 தி. மு. க. ஆட்சி மீதான அதிருப்தியை திசை திருப்ப கொடநாடு விவகாரத்தை எடுத்துள்ளனர் ; டி. ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை பட்டினப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :-

திரை மறைவில் சந்தித்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகிய இருவரும் பொதுவெளியில் சேர்ந்தாற் போல் காட்சியளிக்க
தற்போதைய ஆர்ப்பாட்ட நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்கள். கழக அரசை புரட்சித்தலைவர் அம்மாவின் மறைவுக்கு பிறகு எடப்பாடியார் சிறப்பாக வழி நடத்திய நிலையிலே 9 மாதங்களில் அரசை கவிழ்க்கவேண்டும் என்று பகிரத முயற்சியில் திரை மறைவிலே இருவரும் சேர்ந்து அதனை நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலையில் யாரை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் செய்தார்
சசிகலா, டி.டி.வியை எதிர்த்து அரசியல் செய்தார். அவர்கள் சார்ந்த குடும்பத்தை எதிர்த்து தர்மயுதத்தை செய்து,அம்மாவின் மரணத்தில் சந்தேகம் என்று சொல்லி தர்மயுத்ததை தொடங்கியவர்,அதன் பிறகு டிடிவி காலில் சென்று விழுகிறார். என்னை வந்து சந்தித்தார் என்று டிடிவி ஒத்துகொண்டார். அப்படி இருக்கும்போது எப்படிப்பட்ட சந்தர்ப்பவாதி ஓ.பன்னீர்செல்வம் என்று கழக தொண்டர்களும்,தமிழக மக்களும் உள்ளபடியே உணர்துள்ளார்கள். திரை மறைவில் சந்தித்துக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி ஆகியோர் பொது வெளியில் சேர்ந்தார்போல காட்சியளிக்க தற்போதய ஆர்பாட்ட நாடகத்தை அரகேற்றியுள்ளார்கள். இந்த நாடகத்தை நடத்துவதற்கு ஒரு சப்ஜெட் வேண்டும். அதற்கு கொடநாடு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு,இந்த ஆர்பாட்ட நாடகத்தில் கொடநாடு வழக்கை விரைந்து நடத்தி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் என்பது அவரின் கூற்று. கொடநாட்டை பொறுத்தவரையில் கொலை,கொள்ளை நடந்தவுடன் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய வழக்குகள் பதிவு செய்து சிறையில் அடைத்தது அம்மாவின் அரசு. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடந்து நடந்துவந்த நிலையில் ,இடையில் கொரோனா நோய் தொற்று வந்ததின் அடிப்படையிலே ஒரு வருடங்களாக நீதிமன்றங்கள் செயல்படாத காரணத்தினால் வழக்கு தாமதம்A ஆனது. இருந்தாலும் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு சிஆர்பிசி 311 போடப்பட்டுள்ளது. பிறகு ஆர்கிமென்ட் நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கக்கூடிய நிலையில் திமுக ஆட்சி வந்தது. திமுக ஆட்சியில் இப்போது உள்ள முதல்வரின் ஆணைப்படி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் தலைமையில் வழக்கு மாற்றப்பட்டு விசாரணை வந்தது. 790 விசாரணை அறிக்கையும் நீலகிரி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்திலே தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தீடீரென இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுகிறார்கள். இதனை ஏஎஸ்பி விசாரித்து வருகிறார். ஐஜி தலைமையில் 90 சதவீதம் முடிந்து 890 பக்க அறிக்கை அளிக்கப்பட்டுவிட்டது.ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஏஎஸ்பி தலைமையில் தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது. மேற்கு மண்டல ஐஜி 90 சதவீதம் இந்த வழக்கு விசாரித்து முடிக்ககூடிய ஒரு சூழ்நிலையிலே ஏன் அவரைவிட குறைந்த பதவியில் உள்ள ஏஎஸ்பி நிலையில் உள்ள அதிகாரிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனுடைய மர்மம் என்ன. ஒரு வழக்கு ஜஜி தலைமையில் விசாரணை 90 சதவீதம் முடித்த நிலையிலே திரும்பவும் ஏஎஸ்பிக்கு அளித்து சிபிசிஐடிக்கு மாற்றவேண்டிய அவசியம் என்ன. இது மர்மான முறையில் உள்ளது என்பதுதான் கேள்விக்குறி. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். குற்றவாளிகள் கொலை,கொள்ளை,திருட்டு ஆள் கடத்தல் போதை பொருள் போன்ற கொடும் குற்றம் புரிந்தவர்கள். இந்த வழக்குகள் கேரள நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்றுவருகிறது.இப்படிப்பட்டவர்களுக்கு யார் வக்கலாத்து வாங்குகிறார்கள். இவர்களுக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் அதாவது டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி, என்.ஆர்.இளங்கோ வாதாடி ஜாமீன் பெற்று தந்துள்ளனர். இதனை முதலமைச்சர் சட்டமன்றத்திலே தெரிவித்துள்ளார். இந்த குற்றவாளிக்காக திமுகவை சேர்ந்தவர்கள் ஜாமீன்தாரர்களாக இருந்துள்ளார்கள். இவர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் நாட்டு மக்களின் கேள்வி. முதல் கேள்வி என்பது 90 சதவீதம் ஜஜி தலைமையில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையிலே ஏஎஸ்பி தலைமையில் சிபிசிஐடிக்கு மாற்றியது,இரண்டாவது கொடும் குற்றம் புரிந்தவர்கள் இவர்களுக்கு ஜாமீன் அளித்தது திமுக. குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்த திமுகவினர்களுக்கும்.குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை இந்த விடியா அரசின் முதல்வர் தெரிவிக்கவேண்டும்.இதனை ஏன் விசாரணை செய்யவில்லை. கொடநாடு வழக்கில் கொடும் குற்றவாளிகளை நாங்கள் கைது செய்கிறோம். ஜாமீன் எடுப்பது திமுக.அவர்களுக்கும் திமுகவுக்கு என்ன சம்பந்தம்.இதனை ஏன் இதுவரை காவல்துறை தலைவர் விசாரணை செய்யவில்லை.
இனியும் விசாரிக்குமா என்பதும் சந்தேகமே. ஏனெனில் குற்றவாளிகளுக்கு ஜாமின்தாரர்களாக இருந்த திமுகவினரும், முதல்வர் ஸ்டாலினும் உள்ள போட்டோ ஊடகத்தில் வெளிவந்துள்ளது.அப்படி இருக்கும்போது டிஜிபி எப்படி விசாரணை செய்வார்.எனவே இதனை டிஜிபி விசாரணை செய்ய தவறிவிட்டார்.
ஆகவேதான் இந்த வழக்கு நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சட்டமன்றத்திலேயே எங்கள் பொதுச்செயலாளர் பேசியுள்ளார்.
எங்களை பொறுத்தவரையில் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினோம்.தண்டிக்கும் அளவுக்கு நடவடிக்கை எடுத்தோம்.கொரோனா காலத்தில் நீதிமன்றம் செயல்படாத நிலை ஏற்பட்டது. எங்களுக்கு மடியில் கனமில்லை.வழியில் பயமில்லை.இந்த அரசுக்கு குற்றவாளிகளை நடுநிலையோடு கண்டுபிடிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் சிபிஐ விசாரணை வையுங்கள்.இதனைதான் நாங்கள் கேட்கிறோம்.இதனை ஏன் செய்யவில்லை.
உடனிருந்தே கொல்லும் வியாதி ஓபிஎஸ் என்பதால்தான் இந்த இயக்கத்திலிருந்து அவரை விலக்கினோம்.இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்திலிருந்து மறியல் செய்தது யார்?ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்தான் மறியல் நடைபெற்றது.இன்றைக்கு ஓ.பன்னீர்செல்வமும்,டிடிவி தினகரனும் பேசுவது விந்தையாக உள்ளது. எப்படிப்பட்ட சந்தர்பவாதம்.அயோகியதனம். எப்படிப்பட்ட துரோகதனம். எப்படிப்பட்ட கீழ்தரமான எண்ணம். எனவேதான் இதுபோன்ற புத்தியுள்ள ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களால் வெளியேற்றப்பட்டார். நாங்கள்.இதே தற்போதைய விடியா திமுக-வின் பி. டீம் நாயகன் ஓ.பி.எஸ்.சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவராக இருந்த போது கோடநாடு வழக்கு விசாரணை கால தாமதம் ஆகக்கூடாது.ஒருதலைபட்சமாக திமுக-வினரும் சம்பந்தப்பட்டிருப்பதால், சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று சாலை மறியல் போராட்டம் நடத்தினார். அம்மா அவர்கள் வசித்த வீடு கோயில் போன்றது என்று ஓ. பன்னீர்செல்வம் இன்று கூட்டத்தில் பேசியுள்ளார். கொடநாடு பங்களாவில் அம்மா அவர்கள் தங்கியது உண்மைதான்.அம்மா தங்கிய கொடநாடு யாருக்கு சொந்தம் என்பது ஓபிஎஸ்-க்கு நன்றாக தெரியும். இந்த வீடு தனியார் ஒருவருக்கு சொந்தமானது.இந்த வீட்டை டிடிவியும் இவரும் ஆட்டையை போடவேண்டும் என்பதற்காக இதுபோன்று பேசியுள்ளார்கள். அதற்கான வேலையை பார்த்துவருகிறார்கள்.வீட்டை பொறுத்தவரையில் அம்மா பெயரில் கிடையாது.முகாம் அலுவலகமாக அதனை பயன்படுத்தினார்-ஆனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்கள் இன்றும் குடியிருக்கும் ஒன்றரை கோடி தொண்டர்களின் கோயிலான தலைமைக் கழகத்தை அடியாட்களுடன் ஓபிஎஸ் தலைமையேற்று சென்று, தலைமைக் கழகத்தை, இதய தெய்வம் எம்.ஜி.ஆர் மாளிகையை அடித்து உடைத்து, சூறையாடி, பொருள்களை கொள்ளையடித்தது அனைத்து ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளதை அனைவரும் நன்கு அறிவர்.எனவே ஓபிஎஸ்-க்கு அம்மாவைப் பற்றி பேச தரமும் இல்லை,
தகுதியும் இல்லை, அருகதையும் இல்லை.ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை கொடுத்துள்ளது.மேலும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடியார் பரிந்துரைத்த தலைமை நிலைய செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு கூட்ட தீர்மானங்களை தனது வெப்சைட்டில் அங்கீகரித்து வெளியிட்டுள்ளது. நீதி மன்றமும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையமும் எங்கள் தரப்பிற்குத்தான் கட்சி பெயர், கொடி, சின்னம் அனைத்தும்
சொந்தம் என்று தீர்ப்பின் மூலம் எங்களுக்கு வழங்கப்பட்டது. இன்று நடைபெற்ற செட் அப் ஆர்ப்பாட்டக் கூட்டத்தில், கழகத்தின்
கொடியையும், கழகப் பெயரையும் பன்னீரும், டிடிவி-யும் பயன்படுத்தி உள்ளனர். இது சட்டப்படி குற்றமாகும். எனவே இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தொண்டர்களால் நிராகரிப்பட்ட பன்னீரும், தினகரனும் நடத்திய ஆர்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது

இந்த ஆட்சியை பொறுத்தவரையில் கொடநாடு விவகாரத்தை வைத்து திசை திருப்பவேண்டும்.இந்த ஆட்சி மீது கடுமையான அதிருப்தி உள்ளது.தக்காளி தற்போது சொல்ல முடியாத அளவுக்கு விலை உள்ளது.அனைத்து மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை கூடிகொண்டே போகிறது.அதுபோல செந்தில்பாலாஜி விவகாரம்.தோண்ட,தோண்ட புதையல் என்பதுபோல திமுகவின் ஊழலை மத்திய அமலாக்கப்பிரிவு தோண்ட ஆரமித்துள்ளது.அதுபோல கொலை,கொள்ளை சர்வ சாதரணமாக நடைபெற்றுவருகிறது. மக்களின் வாங்கும் சக்தி போய்விட்டது.மின் கட்டண உயர்வு.பால் விலை உயர்வு.சொத்துவரி உயர்வு.வீட்டுவரி உயர்வு என மக்கள் பல்வேறு வரி உயர்வுகளால் மக்கள் கஷ்டப்பட்டுவருகிறார்கள்.மொத்ததில் இந்த ஆட்சி எப்போது போகும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது.
இதுபோன்ற நேரங்களில் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பவேண்டும் என்பதற்காக கொடநாடு விவகாரத்தை எடுக்கிறார்கள்.அதற்கு போராட ஆள் வேண்டும்.டிடிவியையும்,ஓ.பன்னீர்செல்வத்தை பிடிப்பார்கள்.நாங்கள் ஆர்பாட்டத்திற்கு அனுமதி கேட்டால் அனுமதி தர மாட்டார்கள். எங்கள் மீது வழக்கு போடுவார்கள். சட்டப்படி அனுமதி பெற்று ஆர்பாட்டம் செய்தாலும்கூட எங்கள் மீது வழக்குகள் வரும்.ஆனால் அவர்கள் மீது எந்த வழக்கும் கிடையாது.ஏன் என்றால் அவர்கள் திமுகவின் செல்ல பிள்ளைகள்.கொடநாடு விவகாரத்தில் ஏதாவது தகவல் இருந்தால் காவல்துறையிடம் சொல்லுங்கள்.ஏன் பொது மேடையில் பேசி வருகிறீர்கள். இதன் மூலம் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தலாம் என்றால் அவை அனைத்தும் தூள், துளாகிவிடும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார் .

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *