• June 10, 2025
செய்திகள்

ஆடி அமாவாசை : சதுரகிரி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்ராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 28-ந் தேதி ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளது.இதையடுத்து பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் […]

செய்திகள்

சீல் அகற்றப்பட்டதால் அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு; கணினி அறை சூறை- நினைவு பரிசுகள்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார்.அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.மேலும், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு மாதத்திற்கு அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் தொண்டர்களை அனுமதிக்க கூடாது எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.இந்த […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பள்ளியில் அறிவியல் மன்றம் தொடக்க விழா

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 52- வது அறிவியல் மன்றம் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்க செயலாளர் எஸ். ஆர். ஜெயபாலன் தலைமை தாங்கினார். பள்ளிச் செயலாளர் ஆர். எஸ். ரமேஷ் முன்னிலை வகித்தார்.மாணவி ஜாஸ்பர் ஜெரின் வரவேற்றுப் பேசினார். மாணவி ஸ்ரீதேவி ஆண்டு அறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் குரு நிர்மல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு `அறிவியலே அனைத்திற்கும் ஆதாரம்’ என்ற தலைப்பில் பேசினார்.மாணவி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாணவர் சதுரங்க போட்டி களை கட்டியது

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி வட்டார அளவில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும் தனித்தனியாக இப்போட்டி நடைபெறுகிறது கோவில்பட்டி வட்டாரத்தில் இன்று வியாழக்கிழமை (21-ந்தேதி) காலை சதுரங்க போட்டி தொடங்கியது. 6-8, 9-10,11-12-ம் வகுப்பு என 3 பிரிவுகளாக மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்படுகிறது. கோவில்பட்டி வ.உ.சி .அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்த போட்டியின் பொறுப்பாளராக உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன் நியமிக்கப்பட்டு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புற்றுக் கோவிலில் ஆடித்தபசு கால்நாட்டு விழா

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் 40 ம் ஆண்டு ஆடித்தபசு விழா வருகிற 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. கோடி சக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் சன்னதி முன்பு கால்நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் […]

செய்திகள்

21-வது நினைவுநாள்; சிவாஜி கணேசன் உருவப்படத்துக்கு காங்கிரசார் மரியாதை

நடிகர்திலகம் சிவாஜி கணேசன் 21-வது நினைவுநாளை முன்னிட்டு,இன்று காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன் முன்னிலையில், சிவாஜி கணேசன் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, சுமதி அன்பரசு, மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன், கலைப்பிரிவு நிர்வாகிகள் சுப்பிரமணியன், வேதா, மயிலை அசோக், சுரேஷ்பாபு, சூளை ராஜேந்திரன், சந்திரசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக சென்னை, அடையாரிலுள்ள […]

கோவில்பட்டி

அரசு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி; கோவில்பட்டியில் நாளை நடக்கிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி வட்டார அளவில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும் தனித்தனியாக வெவ்வேறு தேதிகளில் இப்போட்டி நடக்கிறது.கோவில்பட்டி வட்டாரத்தில் நாளை வியாழக்கிழமை (21-ந்தேதி) சதுரங்க போட்டி நடத்தப்படுகிறது. 6-8, 9-10,11-12-ம் வகுப்பு என 3 பிரிவுகளாக மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்படுகிறது.கோவில்பட்டி வ.உ.சி .அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் இந்த போட்டியின் பொறுப்பாளராக உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.சதுரங்க போட்டியில் கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள 12 அரசு […]

செய்திகள்

அ.தி.மு.க. தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அ.தி.மு.க. அலுவலகத்திற்குள் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஒ.பன்னீர்செல்வம் நுழைந்தார். இருதரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால், வருவாய் துறை அதிகாரிகள் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு ‘சீல்’ வைத்தனர்.இதுதொடர்பாக ராயப்பேட்டை போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 14 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் […]

கோவில்பட்டி

கழுகுமலை பெண்கள் 2 பேரிடம் பண மோசடி; தந்தை- மகன் உள்பட 3

கோவில்பட்டியை அடுத்த கழுகுமலை இந்திர பிரஸ்தம் தெருவில் வசித்து வருபவர் ராஜ் மனைவி செல்வி (வயது 31). அதே தெருவை சேர்ந்த சுதாகர் மனைவி சாந்தி (37). இருவரும் இளங்கலை பட்டயபடிப்பு முடித்துவிட்டு வேலைக்காக முயற்சி செய்து வந்தனர்.கழுகுமலையை சேர்ந்த ஆனந்தப்பன் மகன் சிவா (36) என்பவர், இதை தெரிந்து கொண்டு செல்வி, சாந்தி ஆகியோரை சந்தித்து , சென்னையில் வசிக்கும் தனது நண்பர் சுரேந்தர் (27) என்பவர் தலைமை செயலகத்தில் சுகாதார துறையில் வேலைபார்த்து வருவதாக, […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே கபடி போட்டி: பெங்களூரு, கோவை அணிகள் முதலிடம்

கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் தொகுதி குளத்தூர் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு குளத்தூர் ஜாலி பிரண்ட்ஸ் கபடி குழுவினர் சார்பில் 58-ஆம் ஆண்டு ஆண்கள், பெண்கள் கபடி போட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். பெங்களூரு எம்.இ.ஜி., சென்னை ஐ.சி.எப்., சென்னை வருமான வரித்துறை, பேங்க் ஆப் பரோடா, சாய் சென்னை, […]