கோவில்பட்டியில் மாணவர் சதுரங்க போட்டி களை கட்டியது

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி வட்டார அளவில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும் தனித்தனியாக இப்போட்டி நடைபெறுகிறது
கோவில்பட்டி வட்டாரத்தில் இன்று வியாழக்கிழமை (21-ந்தேதி) காலை சதுரங்க போட்டி தொடங்கியது. 6-8, 9-10,11-12-ம் வகுப்பு என 3 பிரிவுகளாக மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்படுகிறது.
கோவில்பட்டி வ.உ.சி .அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்த போட்டியின் பொறுப்பாளராக உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
சதுரங்க போட்டியில் கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள 12 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 120 பேர் பங்கேற்றனர். காலை 10 மணிக்கு போட்டி போட்டியை 22-வது வார்டு கவுன்சிலர் லூர்துமேரி மற்றும் தொழிலதிபர் அமலி பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

3 பிரிவுகளில் களம் காணும் மாணவர்களுக்கு ஒரு அறையும், 3 பிரிவு மாணவிகளுக்கு மற்றொரு அறையும் ஒதுக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. ஒவ்வொரு அறையிலும் 15 டேபிள்கள் போடப்பட்டு உள்ளன,
இப்போட்டியின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக தலைமையாசிரியர் சுதாகரன், தொடக்க கல்வி அலுவலர்கள் முத்தம்மாள், பத்மாவதி, வ.உ.சி. பள்ளி ஆசிரியர்கள் விஜயகுமார், பூபாண்டி, மற்றும் மாரியப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளை உடல்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன் ஒருங்கிணைத்து நடத்தினார்.
போட்டிகள் களை கட்டியது. பார்வையாளர்கள் நிறைய பேர் வந்துள்ளனர். அவர்கள் சதுரங்க ஆட்டத்தை ரசித்தனர். போட்டிகள் முடிவடைந்த பின்னர். மாலை 3 மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.
