கோவில்பட்டி பள்ளியில் அறிவியல் மன்றம் தொடக்க விழா

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 52- வது அறிவியல் மன்றம் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்க செயலாளர் எஸ். ஆர். ஜெயபாலன் தலைமை தாங்கினார். பள்ளிச் செயலாளர் ஆர். எஸ். ரமேஷ் முன்னிலை வகித்தார்.
மாணவி ஜாஸ்பர் ஜெரின் வரவேற்றுப் பேசினார். மாணவி ஸ்ரீதேவி ஆண்டு அறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் குரு நிர்மல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு `அறிவியலே அனைத்திற்கும் ஆதாரம்’ என்ற தலைப்பில் பேசினார்.
மாணவி ஹரிணி தேவி புவி வெப்ப மடைதல் பற்றியும், மாணவர் சரவணன் சூர்யா அறிவியல் விழிப்புணர்வு பாடலையும் பாடினர். சிறப்பு விருந்தினரை உதவி தலைமை ஆசிரியர் அருணாசலம் அறிமுகம் செய்து வைத்தார். மாணவி மகாலட்சுமி நன்றி கூறினார்.
விழாவின்போது மாணவர்கள் வடிவமைத்த புத்தகம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ. பி. கே. பழனிச்செல்வம், தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
