• June 7, 2025

அரசு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி; கோவில்பட்டியில் நாளை நடக்கிறது

 அரசு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி; கோவில்பட்டியில் நாளை நடக்கிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி வட்டார அளவில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும் தனித்தனியாக வெவ்வேறு தேதிகளில் இப்போட்டி நடக்கிறது.
கோவில்பட்டி வட்டாரத்தில் நாளை வியாழக்கிழமை (21-ந்தேதி) சதுரங்க போட்டி நடத்தப்படுகிறது. 6-8, 9-10,11-12-ம் வகுப்பு என 3 பிரிவுகளாக மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்படுகிறது.
கோவில்பட்டி வ.உ.சி .அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் இந்த போட்டியின் பொறுப்பாளராக உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
சதுரங்க போட்டியில் கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள 12 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 12௦ பேர் பங்கேற்கிறார்கள். காலை 9.3௦ மணிக்கு போட்டி தொடங்குகிறது. 22-வது வார்டு கவுன்சிலர் லூர்துமேரி போட்டியை தொடக்கி வைக்கிறார்.
3 பிரிவு மாணவர்களுக்கு ஒரு அறையிலும், 3 பிரிவு மாணவிகளுக்கு ஒரு அறையிலும் போட்டி நடைபெறும். ஒவ்வொரு அறையிலும் 15 டேபிள்கள் போடப்பட்டு போட்டிகள் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உடற்கல்வி இயக்குனர் ஆனந்த பிரபாகரன் கூறினார்.
போட்டிகள் முடிவடைந்த பிறகு மாலை 3 மணிக்கு மேல் பரிசளிப்பு விழா நடைபெறும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *