21-வது நினைவுநாள்; சிவாஜி கணேசன் உருவப்படத்துக்கு காங்கிரசார் மரியாதை

நடிகர்திலகம் சிவாஜி கணேசன் 21-வது நினைவுநாளை முன்னிட்டு,
இன்று காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன் முன்னிலையில், சிவாஜி கணேசன் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, சுமதி அன்பரசு, மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன், கலைப்பிரிவு நிர்வாகிகள் சுப்பிரமணியன், வேதா, மயிலை அசோக், சுரேஷ்பாபு, சூளை ராஜேந்திரன், சந்திரசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக சென்னை, அடையாரிலுள்ள சிவாஜி மணிமண்டபத்தில், தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவரும், சிவாஜி சமூகநலப்பேரவை தலைவருமான கே.சந்திரசேகரன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
காங்கிரஸ் நிர்வாகிகள் சுமதி அன்பரசு, மயிலை அசோக்குமார், சூளை ராஜேந்திரன், சந்திரசேகர், ஊத்துக்கோட்டை வேதா, பாபு, சிவாஜி ரவி, முருகையன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்
