• June 14, 2025
கோவில்பட்டி

இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்: பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க த.மா.கா.கோரிக்கை

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவில்பட்டி நகர தலைவர் கே.பி.ராஜகோபால், நகர செயலாளர் டி.மூர்த்தி ஆகியோர் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.க்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள துணை மின் நிலையம் அருகே கடந்த 15ஆம் தேதி காலை நடந்த விபத்தில் பள்ளி மாணவர் ஸ்ரீ புஷ்பராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் போது, விபத்தை பார்த்தும் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிய ஓட்டுநரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. மனிதாபிமானம் இல்லாத ஓட்டுநரின் […]

செய்திகள்

ஐகோர்ட்டு தீர்ப்பு: சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து கட்சி முடிவெடுக்கும்- டி.ஜெயக்குமார்

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அ.தி.மு.க. பொதுக் குழு முடிவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனால், அந்தப் பொதுக் குழுவில் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து பதவிகளும் செல்லாது என்ற நிலை உருவாகி உள்ளது.நீதிமன்றத்தின் தீர்ப்ப்பு ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு சாதகமாக அமைந்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் […]

செய்திகள்

அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஐகோர்ட்டு தீர்ப்பு

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி நடந்தது. இந்த கூட்டம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இதே கோரிக்கையுடன் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கை […]

கோவில்பட்டி

ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம்: கலெக்டரின் உத்தரவு நிறைவேறுமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற கலெக்டர் உத்தரவு நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம் வசூல் முறை பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. அப்போது கூடுதல் தொகை வரும்வகையில் மீட்டருக்கு சூடு வைத்து டிரைவர்கள் ஓட்ட தொட்ங்கினார்கள்.நாளடைவில் மீட்டர் கட்டணம் முறையை மறந்து குத்து மதிப்பாக கட்டணம் வசூல் செய்ய தொடங்கி விட்டார்கள். இது ஆட்டோ டிரைவர்களுக்கு மிகவும் வசதியாகி விட்டது. அவர்கள் வைத்தது தான் […]

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று தொடங்கியது.திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. 4 மணியளவில் கொடிப்பட்டம் வீதி உலா வந்தது. அதிகாலை 5.40 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள செப்புக்கொடி மரத்தில் காப்பு கட்டிய அரிகரசுப்பிரமணிய பட்டர் கொடி ஏற்றினார். தொடர்ந்து […]

செய்திகள்

அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய 3 பெண்கள் கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வந்தபோது தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.அப்போது தி.மு.க.-பா.ஜனதாவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அஞ்சலி செலுத்தி விட்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தி […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் புதிய துணை மின் நிலையம்; காணொளி காட்சி மூலம் ஸ்டாலின் திறந்தார்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், 161 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார்.மேலும், 51 துணை மின் நிலையங்களில் 602 எம்.வி.ஏ அளவிற்கு திறன் உயர்த்தி 97 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் […]

செய்திகள்

தேசியக்கொடியில் வாசகம் : அவமதிப்பு வழக்கில் ஆசிரியர் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் எபின் (வயது 36). இவர் தாராபுரத்தில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி அனைத்து இல்லங்களிலும் தேசியக் கொடி ஏற்றி ஒற்றுமையை வகைப்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. அந்த வகையில் பள்ளி ஆசிரியர் தேசிய கொடியில் இயேசுவே இந்தியாவை ஆசீர்வதியும் […]

செய்திகள்

எதிர்க்கட்சிகளை பழி வாங்குவதற்காக காவல்துறை பயன்படுத்தப்படுகிறது ; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வை வலியுறுத்தியும் பேச்சுவார்த்தையில் உழியர்களுக்கான குழுவில் அண்ணா தொழிற்சங்கம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.சென்னை பல்லவன் சாலையில் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,.இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டியின்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- […]

செய்திகள்

நடிகர் விஜய்க்கு விதித்த ரூ. 1.5 கோடி அபராதத்துக்கு ஐகோர்ட்டு தடை

புலி படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளத்தில் 15 கோடி மறைத்ததாக அவர் மீது வருமான வரித்துறை ரூ. 1.5 கோடி அபராதம் விதித்தது. அதை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.மேலும் வழக்கு தொடர்பாக செப்டம்பர் 16ம் தேதிக்குள் பதிலளிக்க வருமான வரித்துறைக்கு ஐகோர்ட்டு […]