இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்: பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க த.மா.கா.கோரிக்கை
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவில்பட்டி நகர தலைவர் கே.பி.ராஜகோபால், நகர செயலாளர் டி.மூர்த்தி ஆகியோர் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.க்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள துணை மின் நிலையம் அருகே கடந்த 15ஆம் தேதி காலை நடந்த விபத்தில் பள்ளி மாணவர் ஸ்ரீ புஷ்பராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் போது, விபத்தை பார்த்தும் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிய ஓட்டுநரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. மனிதாபிமானம் இல்லாத ஓட்டுநரின் […]