• June 7, 2025

தூத்துக்குடியில் புதிய துணை மின் நிலையம்; காணொளி காட்சி மூலம் ஸ்டாலின் திறந்தார்

 தூத்துக்குடியில் புதிய துணை மின் நிலையம்; காணொளி காட்சி மூலம் ஸ்டாலின் திறந்தார்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், 161 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார்.
மேலும், 51 துணை மின் நிலையங்களில் 602 எம்.வி.ஏ அளவிற்கு திறன் உயர்த்தி 97 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 52 எண்ணிக்கையிலான மின் மாற்றிகளின் செயல்பாட்டினையும் தொடங்கி வைத்தார்.

இதன்படி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி, தூத்துக்குடி கடற்கரை சாலையில் ரோச் பார்க் அருகில் உள்ளிட்ட 11 பகுதிகளில் 147 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள், நடுவக்குறிச்சியில் துணை மின் நிலையமாக தரம் உயர்த்துதல் உட்பட பல்வேறு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
இதையொட்டி தூத்துக்குடி ரோச் பூங்கா துனை மின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி துனை மின் நிலையத்தை பார்வையிட்டார். விழாவில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோட்டாட்சியர் சிவ சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *