• June 14, 2025
கோவில்பட்டி

கோவில்பட்டியில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

கோவில்பட்டியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 78-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. பழைய பஸ் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் கே.காமராஜ் தலைமையில் பொருளாளர் காமராஜ் திருப்பதிராஜா இனிப்பு வழங்கினார். மாவட்ட செயலாளர் பிரேம்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரிமுத்து, எஸ்.சி.மற்றும் எஸ்.டி.பிரிவு மாநில தலைவர் அருண்பாண்டியன், கோவில்பட்டி நகர தலைவர் பங்காருசாமி, துணை தலைவர் ராஜசேகர், ஐ.என்.டி.யு.சி.சுந்தரராஜ், வேல்சாமி, […]

கோவில்பட்டி

100 நாள் வேலை வழங்க ஊராட்சி நிர்வாகம் மறுப்பதாக குற்றச்சாட்டு

கோவில்பட்டி அருகே வெள்ளாளன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பெரியதாய் என்பவர் உயிரிழந்தை தொடர்ந்து. கடந்த ஜூலை மாதம் அந்த ஊராட்சிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் ஊராட்சி தலைவர் பதவிக்கு வெயிலாட்சி, லாவண்யா இருவரும் போட்டியிட்டனர். இதில் வெயிலாட்சி வெற்றி பெற்றார். இந்நிலையில் வெள்ளாளன்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட சூரியமினுக்கன் கிராமத்தினை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்களுக்கு ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வெயிலாட்சிக்கு ஆதரவாக வேலை செய்யவில்லை என்று கூறி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை […]

கோவில்பட்டி

கொடுத்த கடனை திருப்பி கேட்ட கட்டிட தொழிலாளி குத்திக்கொலை

கோவில்பட்டி புதுக்கிராமம் சிவாஜி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாலமுருகன் (வயது 30) என்பவர், வள்ளுவர் நகரைச் சேர்ந்த முத்துராஜ்(39) என்பவருக்கு ரூ.10 ஆயிரம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.சில மாதங்கள் கழித்து நேற்று, கடனாக கொடுத்த பணத்தை பாலமுருகன் திரும்பி கேட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் பணத்தை தருவவதாக முத்துராஜ் கூறியுள்ளார். இருந்த போதிலும் பணம் உடனடியாக வேண்டும் என்று கூறி மது போதையில் இருந்த பாலமுருகன், முத்துராஜிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ் கத்தியால் பாலமுருகனை […]

செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: நீதிபதி விசாரணை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி துப்பக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு 3000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை 2022 மே மாதம் 18-ந் தேதி தமிழக முதல்-அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. ஆனால், இதுவரையில் தமிழக அரசு அந்த அறிக்கையை வெளியிடவில்லை.இந்நிலையில், நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணைக் குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக […]

தூத்துக்குடி

தூத்துக்குடி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் ஒடிசா மாநிலம் பாலாசோர் பகுதியில் இருந்து 310 கிலோ மீட்டர் தூரத்திலும், மேற்கு வங்க மாநிலம் திகா பகுதியில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்திலும், சாகர் தீவு பகுதியில் இருந்து 210 கிலோ மீட்டர் தூரத்திலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.இந்த தாழ்வுநிலை மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்து சென்று வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை […]

செய்திகள்

பெண் ஐ.பி.எஸ்.அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு: முக்கிய ஆவணங்கள் மாயம்- நீதிபதி அதிர்ச்சி

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழக அரசின் […]

ஆன்மிகம்

கரு முதல் உயிர் பிரியும் நாள் வரை, நலம் அருளும் திருக்கோவில்கள்

தமிழ்நாட்டில் கரு முதல் உயிர் பிரியும் நாள் வரை நலம் அருளும் திருக்கோவில்கள் பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம் கரு உருவாக —கரூர் *பசுபதீஸ்வரர் கோவில் சுகப் பிரசவத்திற்கு –– திருச்சிராப்பள்ளி *தாயுமானவர் கோவில் நோயற்ற வாழ்விற்கு — வைதீஸ்வரன் கோவில், வைதிய லிங்க கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் தீரா நோய் தீர —- திருவதிகை திரிபுரம் எரித்த வீரட்டேஸ்வரர் கோவில். குத்தாலம் உத்தர வேதீஸ்வரர் கோவில் நவ கிரக தோஷங்கள் நீங்க — திருக்குவளை […]

செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு 144 தடை உத்தரவு; கலெக்டர் அறிவிப்பு

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பரச்சேரி கிராமத்தில் ஆகஸ்டு 20 ந்தேதி சுதந்திர போராட்ட வீரா் ஒண்டிவீரன் 251 -வது வீரவணக்க நிகழ்ச்சியும், செப்டம்பர் 1 ந்தேதி நெற்கட்டும் செவல் கிராமத்தில் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவும் நடைபெறவுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இருவரது சிலைகளுக்கும் பல்வேறு அமைப்பினா் சார்பில் மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்த உள்ளூா் மட்டுமன்றி தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் அதிகமானோர் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இன்று ஆகஸ்டு 19 […]

கோவில்பட்டி

உலக புகைப்பட தினம்: கோவில்பட்டியில் புகைப்பட கலைஞர்கள் பேரணி

கோவில்பட்டியில் போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் நலச்சங்கம் சார்பில் உலக புகைப்படதினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பஸ் நிலையம் அருகே உள்ள பயணியர் மாளிகை முன்பிருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, நகர்மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோர் , பச்சை கொடியை அசைத்து பேரணியை தொடக்கி வைத்தனர். பேரணியில் கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர், போட்டோ, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்க கவுரவ தலைவர் பிச்சையா, தலைவர் ராமச்சந்திரன், […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து

மதுரையில் இருந்து சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் ஏற்றிக்கொண்டு கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த மினி லாரியை மதுரையை சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டி வந்தார்.இன்று அதிகாலை வேளையில் எட்டயபுரம் தாண்டி திட்டங்குளம் அருகே வந்தபோது எதிரே வந்த பைக்கின் மீது மோதாமல் இருக்க பிரேக் அடித்தபோது கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி அருகில் உள்ள கால்வாய் ஓடையில் மீது ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது=இந்த விபத்தில் மினி லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். லாரியில் […]