• June 11, 2025
செய்திகள்

கல்வி நிறுவன ஜாதிப் பெயர்களை 4 வாரத்திற்குள் நீக்க வேண்டும்: ஐகோர்ட்டு அதிரடி

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிறுவிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சாதியை ஊக்கப்படுத்தும் சங்கங்களை சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என்பது குறித்தும் பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதிகளின் பெயர்களை நீக்க முடியுமா என்பது குறித்தும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உதரவிட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, சங்கத்தின் பெயரில் உள்ள ஜாதி பெயரை நீக்கி சங்க சட்ட திட்டத்தில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பள்ளிக்கூட வாகனம் மோதி ஆசிரியர் உயிரிழப்பு

கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55), இவர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இன்று காலையில் பஜாருக்கு வந்துவிட்டு தனது பைக்கில் வீட்டிற்கு திரும்பினார். மாதங்கோவில் சாலையில் சென்றபோது எதிரே வந்த தனியார்  பள்ளி வாகனம் திடீரென பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து சீனிவாசன் உடலை மீட்டு […]

செய்திகள்

தமிழில் மட்டுமே அரசாணை; அரசு உத்தரவு

ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் ,அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்த வேண்டும். அரசாணைகள் தமிழில்  மட்டும் வெளியிட வேண்டும். சுற்றறிக்கை குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும். துறைத் தலைமை அலுவலங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு சார்பில் வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் தமிழில் இருக்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்க […]

கோவில்பட்டி

255வது பிறந்த நாள்: கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு ஆட்சியர் இளம்பகவத் மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கவர்னகிரியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது 255வது பிறந்த நாள் விழா இன்று நடைபெற்றது.  விழாவில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் வீரன் சுந்தரலிங்கம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் கோவில்பட்டி கொடாட்சியர் மகாலட்சுமி யும் மரியாதை செலுத்தினார். […]

வேளாண்மை

வருமானத்தை அள்ளித்தரும் `டிராகன்’ பழங்கள் சாகுபடி

பல்வேறு மருத்துவ குணங்களோடு அபாரமான சுவையும் கொண்டிருப்பதால், டிராகன் பழத்திற்கு மார்க்கெட்டில் நல்ல டிமாண்ட், இதனால் விலை சற்று கூடுதலாக இருந்தாலும் சமீப காலமாக மக்கள் டிராகனை விரும்பி வாங்குகிறார்கள். .பெரு நகரங்கள் மட்டுமல்ல  சிறிய நகரங்கள் வரை டிராகனுக்கு மவுசு உள்ளது.மெக்சிகோ நாட்டை தாயகமாக கொண்ட இந்த டிராகன் பழம் வறண்ட கள்ளி இனத் தாவரமாகும். டிராகன் உற்பத்தியில் வியட்நாம் முதலிடத்தில் உள்ளது.நம்முடைய நாட்டில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பிற மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் விருதுநகர், […]

செய்திகள்

கோவில்பட்டியில் தெப்பதிருவிழா; தெப்பத்தில் 9 முறை சுற்றிவந்த புஷ்பரதம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் பங்குனிப் பெருந்திருவிழா கடந்த, 5-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை வேளையில் சுவாமி -அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 13-ந்தேதி தேரோட்டம், 14-ந்தேதி தீர்த்தவாரி முடிந்து இன்று செவ்வாய்க்கிழமை தெப்ப திருவிழா நடைபெற்றது.  காலை 10 மணியளவில் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை நடந்தது.மாலை […]

கோவில்பட்டி

பாளையங்கோட்டை பள்ளியில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய மாணவர்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில்  தனியார் பள்ளி 4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின்னர் இன்று காலை செயல்பட தொடங்கியது. பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் தமது அன்றாட பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, 8ம் வகுப்பு மாணவர் ஒருவரை , சக மாணவரே அரிவாளால் வெட்டிய சம்பவம் அரங்கேறியது. இந்த தாக்குதலை தடுக்க அங்கே இருந்த ஆசிரியர் முயன்றபோது . அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். […]

கோவில்பட்டி

திடீர் தடை: ஓடாத ராட்டினங்களை வேடிக்கை பார்த்து செல்லும் மக்கள்; களை இழந்த

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா என்பது கோவில்பட்டி மட்டுமின்றி சுற்று வட்டார மக்களுக்கு மறக்க முடியாத திருவிழா ஆகும். பங்குனி மாத இடையில் தொடங்கி சித்திரையில் தேரோட்டம் கண்டு தீர்த்தம் கொண்டாடி தெப்ப திருவிழாவுடன் நிறைவு பெறும். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழாவின்போது மக்கள் ஒன்று கூடி தேர் இழுப்பதில் தொடங்கி தொடர்ந்து 3 நாட்கள் களைகட்டும். கோவில் மைதானத்தில் ராட்டினங்களில் ஏறி மகிழும் சிறுவர் சிறுமியர்கள் மட்டுமின்றி பெரியவர் களும் அடங்குவர். பல […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கல்லூரியில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப்  சார்பில் விண்வெளி அறிவியல் குறித்த கருத்தரங்கு நடந்தது. தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்துமுருகன் தலைமை தாங்கினார். கல்லூரி இயற்பியல் துறை தலைவர் சசீதா, வணிக மேலாண்மை துறை தலைவர் விஜய கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். .கருத்தரங்கை கல்லூரி முதல்வர் செல்வராஜ் தொடக்கி வைத்தார் திருச்சி நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியரும், 5000 இடங்களில் […]

கோவில்பட்டி

ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்

கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது அந்த வகையில் 44-வது அன்னதானம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் பங்குனி உத்திர சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு பாத்தியப்பட்ட மங்கள விநாயகர் கோவில் முன்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் கமலா தலைமை தாங்கினார். பராசக்தி மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.. போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார், கிராம […]