• June 8, 2025

கோவில்பட்டி கல்லூரியில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு

 கோவில்பட்டி கல்லூரியில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப்  சார்பில் விண்வெளி அறிவியல் குறித்த கருத்தரங்கு நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்துமுருகன் தலைமை தாங்கினார். கல்லூரி இயற்பியல் துறை தலைவர் சசீதா, வணிக மேலாண்மை துறை தலைவர் விஜய கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

.கருத்தரங்கை கல்லூரி முதல்வர் செல்வராஜ் தொடக்கி வைத்தார் திருச்சி நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியரும், 5000 இடங்களில் அஸ்ட்ரானமி நிகழ்வின் மாநில ஒருங்கிணைப்பாளருமான ரமேஷ் கலந்து கொண்டு சூரியன்,நிலா,ஆகியவற்றின் இயக்கங்களை வைத்து நாட்காட்டி கணிப்பது பற்றியும் . சூரியன் நிழலை வைத்து கட்டிட உயரத்தை கணிப்பது குறித்தும், வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் குறித்தும் செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார்.

கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் இயற்பியல் துறை பேராசிரியர் பிரியங்கா அனைவரையும் வரவேற்றார் கல்லூரி பேராசிரியை சரவணகுமாரி நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *