• June 8, 2025

ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்

 ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்

கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது அந்த வகையில் 44-வது அன்னதானம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் பங்குனி உத்திர சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு பாத்தியப்பட்ட மங்கள விநாயகர் கோவில் முன்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் கமலா தலைமை தாங்கினார். பராசக்தி மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.. போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார், கிராம நிர்வாக அலுவலர் மந்திர சூடாமணி ஆகியோர் சந்திரசேகர்,முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.எஸ். ரமேஷ், தொழிலதிபர் இ.பி. ரமேஷ்,ஆடிட்டர் திருமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொங்கல் பிரசாதம் மற்றும் அன்னதானத்தை போலீஸ் துணை சூப்பிரண்டு .ஜெகநாதன் தொடங்கி வைத்தார்.

ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், சாந்தி டெய்லர் சிவமூர்த்தி, தொழிலதிபர்கள் கணபதி, தனபால், கொல்லம் சேகர், அசோக், ஆக்ரா காளிராஜ், பா.ம.க. ராமச்சந்திரன், ஏழாயிரம் பாண்டி, தங்கராஜ், பாண்டியன், சண்முக சுந்தரம், காளிராஜ், வரத ராஜன்,பூபேஷ், மாரிமுத்து, பசுமை இயக்கம் செந்தில், ஆசிரியர்கள் ஜீவானந்தம், அன்பு, மாரியப்பன் மற்றும் பாலமுருகன், சாய் ஸ்டூடியோ கலந்து கொண்டனர். நாகராஜ், கவுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்,

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பராசக்தி மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் தங்கவேலு, மகேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கமலேஸ்வர் மேட்ச் ஒர்க்ஸ் அதிபர் நடராஜன் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *