255வது பிறந்த நாள்: கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு ஆட்சியர் இளம்பகவத் மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கவர்னகிரியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது 255வது பிறந்த நாள் விழா இன்று நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் வீரன் சுந்தரலிங்கம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் கோவில்பட்டி கொடாட்சியர் மகாலட்சுமி யும் மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரன் சுந்தரலிங்கம் வாரிசுதாரர் சூரிய லட்சுமி என்பவருக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

