வருமானத்தை அள்ளித்தரும் `டிராகன்’ பழங்கள் சாகுபடி

பல்வேறு மருத்துவ குணங்களோடு அபாரமான சுவையும் கொண்டிருப்பதால், டிராகன் பழத்திற்கு மார்க்கெட்டில் நல்ல டிமாண்ட், இதனால் விலை சற்று கூடுதலாக இருந்தாலும் சமீப காலமாக மக்கள் டிராகனை விரும்பி வாங்குகிறார்கள்.
.பெரு நகரங்கள் மட்டுமல்ல சிறிய நகரங்கள் வரை டிராகனுக்கு மவுசு உள்ளது.மெக்சிகோ நாட்டை தாயகமாக கொண்ட இந்த டிராகன் பழம் வறண்ட கள்ளி இனத் தாவரமாகும்.
டிராகன் உற்பத்தியில் வியட்நாம் முதலிடத்தில் உள்ளது.நம்முடைய நாட்டில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பிற மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் விருதுநகர், திண்டுக்கல் தருமபுரி மதுரை திருவண்ணாமலை மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ளன.
அது எப்படி சாகுபடி செய்வது என்பது பற்றி பார்ப்போம்.

ஒரு முறை செலவு செய்தால் பல ஆண்டுகளுக்கு வரவாக உள்ள இந்த டிராகன் பழம் சாகுபடி செய்ய அதிக பட்சமாக ஏக்கருக்கு 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.இது விவசாயிகளுக்கு மிகவும் கஷ்டமானது தான் இருந்தால் ஓரு தடவை முதலீடு செய்தால் அடுத்த 25-30 ஆண்டுகளுக்கு நிரந்தர வருமானம் பெறலாம் .வேறு எந்த பயிரிலும் இப்படி யொரு அம்சம் இல்லை
ஒரு ஏக்கருக்கு 2000தைவான் கிங் ரைட் ரக பழக்கன்றுகள் தேவை.500கல்தூண்களை அமைத்து ஒஓரு தூணுக்கு 4செடிகள் வீதம் நடப்பட்டுள்ளது.செடியின் பாரத்தை முழுமையாக தாங்கிட மரத்தூண்களை காட்டிலும் கல்தூண்கள் வலிமையானது .எக்காரணம் கொண்டு தண்ணீர நிலத்தில் தேங்கக் கூடாது.வடிகால் வசதியுள்ள இடங்களில் தான் பயிரிட வேண்டும்.
ஒரு செடி நடவு செய்த முதல் ஆண்டில் காய்ப்புக்கு வந்து விடும்.ஆரம்பத்தில் ஒரு பழம் 200கிராம் முதல் கால் கிலோ வரை இருக்கும்.இயற்கை இடுபொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால்( மீன் அமிலம் , பஞ்ச காவியா,) நல்ல சுவையுடன் அதிக எடையுள்ள பழங்கள் கிடைக்கும்.ஓரு செடி க்கு அதிக பட்சமாக 10முதல்15 பழங்கள் வரை கிடைக்கும்.

ஒருகிலோ பழத்தை அதிக பட்சமாக ரூ.120முதல் 180 வரை வியாபாரிகள் தோட்டத்திலே வாங்கி கொள்கின்றனர்.தரமான பழங்கள் இருந்தால் இன்னும் கூடுதலான விலை கிடைக்கும்.
ஏக்கருக்கு ஆண்டுக்கு 5லட்சம் வரை வருமானம் தரக்கூடியது முதல் இரண்டு ஆண்டுகளிலேயே இதற்கான செலவிட்ட தொகையை விவசாயிகள் எடுத்து விடலாம்.அதன்பிறகு தொடர்ந்து நல்ல லாபம் கிடைக்கும்.சந்தை வாய்ப்பை பொறுத்து கூடுதலாகவோ அல்லது சற்று குறைவாகவோ கிடைக்கும்.
டிராகன் பழ சாகுபடியில் கவனிக்க வேண்டியவை.
1) வெயில் காலத்தில் செடி மஞ்சள்நிற மாகிவிட வாய்ப்பு உள்ளது.அவ்வாறாக ஆகாமல் ஈரத்தன்மையுடன் செடிகளை வைத்திருக்க சுண்ணாம்பு பவுடரை நீரில் கலந்து தெளிப்பு செய்ய வேண்டும்.
2) தண்ணீர் தேங்கக்கூடாது.வறண்ட நிலத்தில் நன்றாக வளரும்.தண்ணீர் தேங்கி இருந்தால் செடி வாடி அழுகி விடும்.
3) பெரும்பாலும் இயற்கை பூச்சி / பூஞ்சான் கொல்லிகளை பயன்படுத்திட வேண்டும்.
4) மக்கிய சாண எருவை பயன்படுத்திட வேண்டும்.
தேசிய தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் மற்றும் மாநில தோட்டக்கலை ஆபிவிருத்தி திட்டத்தின் கீழ் டிராகன் பழ சாகுபடிக்கு மானியம் வழங்க பட்டு வருகிறது. அத்துடன் தோட்டக்கலை துறை வாயிலாக தொழில்நுட்ப ஆலோசனையும் விவசாயிகளுக்கு வழங்கபடுகிறது. மக்கள் விரும்பும் பழமாக மாறி வருகிறது டிராகன் பழங்கள்.
அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை


