கோவில்பட்டியில் பள்ளிக்கூட வாகனம் மோதி ஆசிரியர் உயிரிழப்பு

கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55), இவர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இன்று காலையில் பஜாருக்கு வந்துவிட்டு தனது பைக்கில் வீட்டிற்கு திரும்பினார்.
மாதங்கோவில் சாலையில் சென்றபோது எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் திடீரென பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த ஆசிரியர் சீனிவாசன் மனைவி வீரலட்சுமி, இவர் கே. புதுப்பட்டியில் அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்
