இந்தியாவில் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், வறுமையை ஒழிக்கவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த திட்டம் அளிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். […]
சேவாலயா தொண்டு நிறுவனம் தூத்துக்குடி மாவட்டம் மேல்செய்தலை கிராமத்தில் அமைந்துள்ள வெள்ளையப்ப ரெட்டியார் ஆவுடைபார்வதி அம்மாள் நினைவு மையத்தில் 28 ஏப்ரல் முதல் 30 வரை பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால சிறப்பு பண்புக்கல்வி மற்றும் விளையாட்டு முகாம், கிராம மக்களுக்கான இயற்கை மருத்துவ முகாமும் நடைபெற்றது. கீழஈரால் டான் பாஸ்கோ கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பிரபு மற்றும் ஜெகவீரபாண்டியபுரம் ஊராட்சித் தலைவர் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மருத்துவர்கள் மூவப்பன்,சுமங்கலி ஆகியோர் இயற்கை மருத்துவம் […]
சைபர் மோசடி வழக்குகளில் மீட்கப்பட்ட ரூ.3.71 லட்சம்; உரியவர்களிடம் ஆல்பர்ட் ஜான் ஒப்படைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம், இருசக்கர வாகனம் விற்பனை என்பன போன்ற போலி விளம்பரங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இதை நம்பி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் பணம் அனுப்பி ஏமாற்றப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட 3 பேர் இதுகுறித்து தேசிய சைபர் குற்றப்பிரிவு போலீஸ் பிரிவில் புகார் பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை […]
கோவில்பட்டி சுபா நகரில் 20 ஆண்டுகளுக்கும் ஆஸ்கார் அறிவியல் மேலாண்மை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 2004 ஆம் ஆண்டு முறையான அங்கீகாரத்தைப் பெற்றதிலிருந்து, முன்னோடி ஹோட்டல் மேலாண்மை திட்டத்தில் தொடங்கி, உயர்தர கல்வியை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இங்கு தொழில் சார்ந்த படிப்புகள் ஏராளம் உள்ளன. இங்கு படித்து முடித்தவுடன் நிச்சய வேலை அனைவருக்கும் உண்டு என்ற பெருமைப்பட இந்த நிறுவனத்தினர் சொல்கிறார்கள். ஆஸ்கார் வழங்கும் தொழில் படிப்புகள் விவரம் வருமாறு:- 1)கேட்டரிங் மற்றும் ஹோட்டல் […]
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தும் விதமாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான ஆற்றல் மேம்பாட்டு பயிற்சி கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் கடிதத்தின்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி மாவட்ட உதவி திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆலோசனையின்படி இப்பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் கோவில்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 4 பள்ளிகளிலிருந்தும் கயத்தார் ஒன்றியத்திலிருந்து ஒரு பள்ளி, ஓட்டப்பிடாரம் […]
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் எனக் கூறிய பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த தினமான ஏப்ரல் – 29ம் தேதியை தமிழக முதல்வர் சட்டசபை கூட்டத்தொடரில் ஏப்-29 முதல் மே 5ம் தேதி வரை தமிழ் வார விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார். தமிழக முதல்வரின் அறிவிப்பினை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் தமிழ் வார விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கான, மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு அரசு போக்குவரத்து டிப்போ அருகில் நடைபெற்றது. தவெக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார். நிகழ்வில் வடக்கு மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர்,கிளை நிர்வாகிகள், சார்பு அணிப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழமைகள் என ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் *ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவங்கள் எதிர் காலத்தில் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு எல்லைகளை இன்னும் பலப்படுத்தி, சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.’ *தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்துக்கு மத்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும். *விஜயகாந்துக்கு மணி மண்டபம் அமைத்திட வேண்டும். சென்னை 100 அடி சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் […]
கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் மைக்ரோ பாயிண்ட் கம்ப்யூட்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின் முன்னிலை வகித்தார். `தமிழ் எங்கள் உயிர்’ என்ற தலைப்பில் வழக்கறிஞர் ரவிக்குமார், `பாரதிதாசனும் தொழிலாளர்களும்’ என்ற தலைப்பில் பிஎஸ்என்எல் துரைராஜ், `பெரியாரும் பாரதிதாசனும்’ என்ற தலைப்பில் உதவி தலைமை ஆசிரியை முருகசரஸ்வதி, `பாரதிதாசனும் பொதுவுடமையும்’ தலைப்பில் இசை ஆசிரியர் அமலபுஷ்பம் […]
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தை கே.வி. மகாலில் தேமுதிக தலைமை செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்துகொண்டு கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும், கட்சிபணிகள், எதிர்கால அரசியலில் முக்கிய முடிவுகள், திட்டங்கள் குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். இந்த நிலையில், தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேமுதிக பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தர்மபுரி […]