அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்குகிறார். திமுக துணை பொதுச்செயலாளரும், பாராளுமன்ற குழுத்தலைவருமான கனிமொழி கருனாநிதி எம்.பி., கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்த இந்த கூட்டத்திற்கு மாநில […]
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, அட்டாரி-வாகா எல்லை மூடல் என அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்தது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில், பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் பகுதியில் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை […]
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு மே 9-ந்தேதி வெளியாகும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு நாள் முன்கூட்டியே அதாவது 8-ந்தேதி வெளியிடப்பட்டது. அதேபோல், 8 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 15-ம் தேதி முடிந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து மதிப்பெண்களை இணையதளத்தில் ஏற்றும் பணி நடந்தது. அதுவும் தற்போது நிறைவடைந்தது. இதனையடுத்து தேர்வு முடிவை வெளியிடுவது […]
அதிமுக பொதுச்செயலாளர்,முன்னாள் முதலமைச்சர்,எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 71வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்,சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன்,பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,நகரச் செயலாளர் விஜய பாண்டியன்,ஒன்றிய செயலாளர்கள் அழகர்சாமி,போடுசாமி,அன்புராஜ்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மாவதி,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,நகர அவைத்தலைவர் […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தமிழகத்தையே உலுக்கியது. சி.பி.ஐ. விசாரணையை அடுத்து, இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன் (வயது 30), வசந்தகுமார் (32), சதீஷ் (33), மணிவண்ணன் (30), திருநாவுக்கரசு (30), ஹேரேன் பால் (34), பாபு என்ற பைக் பாபு (38), அருளானந்தம் (38), […]
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் வேலூர் மாவட்ட ஆக்கி சங்கம் சார்பாக வேலூரில் வருகிற மே 19 முதல் 23ஆம் தேதி வரை மாநில சப் ஜூனியர் சாம்பியன் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி கலந்து கொண்டு விளையாட இருப்பதால் தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் ஆக்கி அணி தேர்வு 15.5.2025 வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் நடக்க உள்ளது. […]
கோவில்பட்டி கிருஷ்ணாநகர் அரசு கலைக்கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதி திறப்பு விழா நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி எம்பி கனிமொழி பங்கேற்று சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா,தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், ராமராஜ்,தாசில்தார் சரவணபெருமாள், திமுக ஒன்றிய செயலாளர்கள் பீக்கிலிபட்டி முருகேசன், ராதாகிருஷ்ணன், தலைமைச் செயற்குழு […]
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- போட்டித் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் “டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 பிரிலிம்ஸ் -2025” தேர்வுக்கு இலவசமாக மாநில அளவிலான 2 – முழு மாதிரித்தேர்வுகள் (Online Test) – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் Virtual Learning Portal (www.tamilnaducareerservices.tn.
கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பாக ஆண்டுதோறும் கோடைகால மற்றும் குளிர்கால ஆக்கி பயிற்சி முகாம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாம் 11 -ந்தேதி தொடங்கியது. கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் 20 5 2025 வரை நடக்கும் இந்த பயிற்சி முகாமில் மொத்தம் 50 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை […]
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு மனைவியுடன் வந்த ஜி.பி.முத்து; காணாமல் போன தெருவை கண்டுபிடித்து
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜி.பி. முத்து, டிக்டாக் மூலம் பிரபலம் ஆனவர். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் புகழ் பெற்றார். இதை தொடர்ந்து சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார். திங்கட்கிழமையான இன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்று ஆட்சியரிடம் மனு அளிக்க ஜி.பி.முத்து தனது மனைவியுடன் வந்தார். மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஜி.பி.முத்து அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:- “தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் வட்டம்,காலன் […]