பேரறிஞர் அண்ணா நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது .இதையொட்டி கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தமிழரசன் படிப்பகத்தில் நகர திமுக சார்பில் நகர்மன்ற தலைவர்,நகரச் செயலாளர் கருணாநிதி தலைமையில் .அண்ணா திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் முனியசாமி,பொதுக்குழு உறுப்பினர் ராமர்,மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா,மாவட்ட பிரதிநிதிகள் ரவீந்திரன்,மாரிச்சாமி,மகளிர் தொண்டரணி இந்துமதி,நகரத் துணைச் செயலாளர் அன்பழகன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மகேந்திரன்,நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். […]
குலசேகரப்பட்டினத்தில் இருந்து 2 ஆண்டுகளில் ராக்கெட் விண்ணில் ஏவப்படும்; `இஸ்ரோ’ தலைவர் நாராயணன்
இந்திய விண்வெளி ஆய்வு நிரோனம் (இஸ்ரோ) தலைவராக பொறுப்பேற்ற நாராயணன் தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவருக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. சக இஸ்ரோ அதிகாரிகள், அலுவலர்களும் நாராயணனை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் நாராயணன் செய்தியாளர்களிடம்கூறியதாவது:- 1947 இல் சுதந்திரம் அடைந்த பிறகு சாதாரண நாடாக இருந்த இந்தியா தற்போது பெரிய அளவில் முன்னேறி உள்ளது. நம் நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து வடக்கு மாவட்ட செயலாளர்,சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு புதுரோட்டில் உள்ள அண்ணா திருவருவுச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் எம்எல்ஏ மோகன்,பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் விஜயபாண்டியன்,ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, அன்புராஜ், அழகர்சாமி, செல்வக்குமார்,தலைமைக் கழக பேச்சாளர் மூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், கலைப்பிரிவு மாவட்டச் […]
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. விடாமுயற்சி திரைப்படம் பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே ரிலீஸ் ஆக இருந்த இப்படம் சில காரணங்களால் வரும் 6ந் தேதிக்கு தள்ளிப்போனது. படத்தின் […]
1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும். 2.கந்தசாமி : இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது. 3. ஆறுமுக தேவசேனாபதி : இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது. 4. சுப்பிரமணியர் : இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை […]
கோவில்பட்டி காமராஜர் நகர் கருமாரியம்மன் கோவில் திடலில் ப்யூசர் பைட்டர் சார்பில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. போட்டியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் எம்ஆர்வி கவியரசன் கலந்து கொண்டு போட்டியை தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் கார்த்திக், […]
மத்திய பட்ஜெட்டில் தீப்பெட்டி தொழிலுக்கு வரிச்சலுகை இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது; கோவில்பட்டி சேதுரத்தினம்
மத்திய பட்ஜெட் குறித்து கோவில்பட்ட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க முன்னாள் செயலாளர் சேது ரத்தினம் கூறியதாவது:- மத்திய பட்ஜெட்டில் தீப்பெட்டி தொழிலுக்கு எந்தவிதமான வரிச்சலுகையும் அறிவிக்கப்படவில்லை.மேலும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையும் உயர்த்தப்படவில்லை. தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான பொட்டாசியம் குளோரைடுக்கு பொட்டாஷ் என்ற வேதிப்பொருள் தேவை. விவசாயத்திற்கு மானிய விலையில் பொட்டாஷ் வழங்கப்படுவது போல தீப்பெட்டி தொழிலுக்கும் பொட்டாஷ் மானிய விலையில் வழங்கினால் உற்பத்தி செலவு குறையும்.. மத்திய அரசின் […]
2014 ம் ஆண்டு வெளியான பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தை இயக்கி எஸ்.யு அருண் குமார் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். இப்படம் பல திரைப்பட விழாக்களில் வெளியாகி மக்களின் மனதை வென்றது. 6 தமிழ்நாடு மாநில அரசு விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு சேதுபதி திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் விஜய் சேதுபது மற்றும் ரம்யா நம்பீசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இப்படம் மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. மீண்டும் 2019ம் ஆண்டு […]
தேவராஜ்-மோகன் இயக்கத்தில் 1976 ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். 35 நாட்களில் சிம்பொனியை உருவாக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இவர் தற்பொழுது வாலியண்ட் சிம்பனி என்னும் […]