மத்திய பட்ஜெட்டில் தீப்பெட்டி தொழிலுக்கு வரிச்சலுகை இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது; கோவில்பட்டி சேதுரத்தினம்

மத்திய பட்ஜெட் குறித்து கோவில்பட்ட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க முன்னாள் செயலாளர் சேது ரத்தினம் கூறியதாவது:-
மத்திய பட்ஜெட்டில் தீப்பெட்டி தொழிலுக்கு எந்தவிதமான வரிச்சலுகையும் அறிவிக்கப்படவில்லை.மேலும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையும் உயர்த்தப்படவில்லை.
தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான பொட்டாசியம் குளோரைடுக்கு பொட்டாஷ் என்ற வேதிப்பொருள் தேவை. விவசாயத்திற்கு மானிய விலையில் பொட்டாஷ் வழங்கப்படுவது போல தீப்பெட்டி தொழிலுக்கும் பொட்டாஷ் மானிய விலையில் வழங்கினால் உற்பத்தி செலவு குறையும்..
மத்திய அரசின் தடையை மீறி சீன சிகரெட் லைட் டர்கள் கொல்கத்தா, மும்பை, சென்னை துறை முகம் வழியாக இந்தியா முழுவதும் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனையாகிறது.
இவற்றை தடுக்க மாநில அரசின் ஒத்துழைப்புடன் காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சிகரெட் லைட்டர் விற்றால் 20 தீப்பெட்டிகள் விற்பனை பாதிக்கபப்டும்.
அதே நேரத்தில் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை ஈட்டுபவர்கள் வரி செலுத்த தேவைய்ஹில்லை என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. தீப்பெட்டி ஏற்றுமதி வரி 7 சதவீதம் நீக்கியது வெறும் விவசாயத்திற்கு கண் துடைப்பு போன்று உள்ளது. மொத்தத்தில் மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு சேதுரத்தினம் கூறினார்.,
