• June 8, 2025

Month: November 2024

கோவில்பட்டி

செம்மொழித் தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்; உலகத்திருக்குறள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் பெருந்திரள் கோரிக்கை முழக்கம் கோவில்பட்டி. பயணியர் விடுதி முன்பு இன்று , செவ்வாய்க்கிழமை, காலை 10 மணிக்கு  நடைபெற்றது. செம்மொழித் தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கச் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும். அறிவிக்க வேண்டும் .சென்னை – மதுரை உயர்நீதி மன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை  இந்திய அரசை வலியுத்தி பெருந்திரள் கோரிக்கை முழக்கம் […]

செய்திகள்

சென்னையில் மழை: கட்டுப்பாட்டு மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் நேற்றிரவு தொடங்கி பரவலாக மழை தொடரும் நிலையில், ரிப்பன் மாளிகையில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர்.12) ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆய்வுக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- சென்னையில் நேற்றிரவு தொடங்கி மழை பெய்தாலும் எந்த பகுதியிலும் பெரிதாக மழைநீர் தேங்கவில்லை. இனிமேல் கனமழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. முதலமைச்சர் உத்தரவின்படி […]

சினிமா

கங்குவா படத்திற்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்: படத்திற்கு நிபந்தனை விதித்த ஐகோர்ட்

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `கங்குவா’. மிக பிரமாண்டமான பொருள்செலவில் வரலாற்று புனைவாக உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 20 கோடி ரூபாயை வரும் […]

சினிமா செய்திகள்

இராஜராஜ சோழன் சிலை ஆலயத்துக்கு அகத்தே இல்லாமல் புறத்தே நிறுவப்பட்டிருப்பது கண்டு தமிழ்

இராஜராஜ சோழனின் சதய விழா கோலாகலமாக 2 நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, இராஜராஜ சோழன் சிலையை தஞ்சை பெரிய கோயில் வளகத்திற்குள் வைப்பதை எது தடுக்கிறது என பேசியிருந்தார். தற்போது அதனை கவிதை வடிவில் தனது எக்ஸ் வலைதளத்தில் வைரமுத்து பதிவிட்டுள்ளார். கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது:- மாமன்னன் ராசராசனின் 1039-ம் சதய பெருவிழா தஞ்சை பெருவுடையார் கோயிலில் நிகழ்ந்தது. பங்குபெற்றேன். தமிழர்களின் கலைச்சின்னம் இது என்ற வரலாற்று பரவசமும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ரெயில்வே  சுரங்க பாலத்தின் இருபுறமும் உடனே அணுகுசாலை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் உள்ள இளையரசனேந்தல் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கப்படாததால், அதனைச்சுற்றியுள்ள சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நேரங்களில் அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றது. மேலும் இவ்வழியாக ஏராளமான குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மழை காலங்களில் சுரங்க பாதையில் அதிக அளவில் மழைநீர் தேங்கிவிடுவதால் பள்ளி குழந்தைகளை ஏத்தி செல்லும் பள்ளி வாகனங்கள் சுரங்க பாதையில் மழை தண்ணீரில் சிக்கி கொள்ளும் நிகழ்வுகளும், […]

செய்திகள்

கலெக்டரை விரட்டி அடித்த மக்கள்-கார் மீது கல் கட்டைகளை வீசி தாக்குதல்: தெலுங்கானாவில்

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்ட கலெக்டர் பிரதீக் ஜெயின் மற்றும் அதிகாரிகளை கிராம மக்கள் விரட்டி விரட்டி தாக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதுதொடர்பான வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது. தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்ட கலெக்டராக இருப்பவர் பிரதீக் ஜெயின். இந்த மாவட்டத்தில் லக்செர்லா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமப்பகுதியில் புதிதாக மருந்து நிறுவனங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மருந்து நிறுவனங்களுக்கு நிலம் தேவைப்படுகிறது. இதையடுத்து கிராம […]

செய்திகள்

அயோத்தி ராமருக்கு தயாராகி வரும் சிறப்பான கம்பளி ஆடைகள்

குளிர்காலம் நெருங்கியுள்ள நிலையில் அயோத்தி ஸ்ரீ பால ராமருக்கு கம்பளியும், பஷ்மினா சால்வைகளும் அணிவிக்க கோயில் நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்துள்ளனர். உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த ஜனவரி 22-ல் அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஸ்ரீ ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்டமாக பிரதிஷ்டை விழா நடைபெற்றது. இந்நிலையில், ஸ்ரீ ராமருக்கு காலநிலைகளுக்கு ஏற்றவாறு உடைகளை கோவில் நிரவாகம் நிர்வகித்து வருகின்றது. முன்னதாக கோடை காலத்தில் […]

தூத்துக்குடி

நாம் தமிழர் கட்சி 2026 தேர்தலிலும் தனித்து போட்டியிடும்; சீமான் பேட்டி

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் “இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிக்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே  கூறியது குறித்து கேள்வி எழுப்பினர்.  அதற்கு பதிலளித்த சீமான் கூறியதாவது:- இலங்கையில் தமிழர்களை சுட்டு கொன்றார்கள். வலைகளை கிழித்து எறிந்தார்கள். இதற்கு […]

சினிமா

24 மணி நேரத்தில் 70 மில்லியன் பார்வைகளை கடந்த ‘கேம் சேஞ்சர்’ டீசர்

ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அரசியல் அதிரடி திரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இயக்குநர் சங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். சங்கருடன் இணைந்து இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இதில், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். […]