இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற திரைப்படம்`நிறங்கள் மூன்று’. அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உட்பட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் நவம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பேசிய அதர்வா, கார்த்திக் நரேனோட `துருவங்கள் பதினாறு’ திரைப்படம் எனக்கு பிடிக்கும். அவர் ஒரு சுவாரஸ்யமான இயக்குநர். அவர் ஒவ்வொரு காட்சியையும் எடுக்கிற விதம் ரொம்பவே தனித்துவமாக இருக்கும். இந்த படத்தோட கதையை நான் படிச்சதும் எனக்கு […]
திரிபுரா மாநிலத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது. இந்த விபத்தால் அந்த பகுதியில் ரெயில்கள் இயக்க முடியாததால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் பயன்படுத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் அனைத்தும் ரெயிலில்தான் வருகிறது. ரெயில்களில் கொண்டு வரப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் டேங்கரில் சேமிக்கப்பட்டு பின்னர் எரிவாயு நிலையங்களுக்கு அனுப்பப்படும். ஆனால் தற்போது, ரெயில் தண்டவாளம் விபத்தில் சிக்கி உள்ளதால் வேறு எந்த ரெயிலும் அம்மாநிலத்திற்குள் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே […]
வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தூத்துக்குடி தாமிர ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி தாமிர ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விஷயத்தில் நிபந்தனைகளை ஆலை நிர்வாகம் பின்பற்றவில்லை என்றும் தமிழ்நாடு அரசும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும் குற்றம் சாட்டி ஆலையை மூட உத்தரவிட்டது. இதற்கு எதிராக ஆலை நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டது. எனினும், மாநில அரசின் முடிவை 2018-ல் சென்னை ஐகோர்ட் உறுதி […]
நடிகை நயந்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ஒரு ஆவணப்படம் தயாராகி உள்ளது. ‘நயன்தாரா பியாண்ட் தி பேரி டேல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் வருகிற 18-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், நடிகர் தனுஷ் மீது நயந்தாரா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘பல தவறான விசயங்களை சரி […]
இந்திய ரெயில்வேயின் ஒரு மைல் கல்லாக வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்தே பாரத் ரெயில் வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரெயிலில், பயணிகளுக்கு வழக்கம் போல் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது கொடுக்கப்பட்ட சாம்பாரில், வண்டு இறந்து கிடந்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் […]
முன்னாள் உலக ‘ஹெவிவெயிட்’ சாம்பியனான மைக் டைசன் இதுவரை விளையாடிய 58 போட்டியில், 50-ல் வெற்றி கண்டுள்ளார். இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை ‘நாக்-அவுட்’ முறையில் வீழ்த்தினார். 6 போட்டியில் மட்டும் தோல்வியடைந்தார். சுமார் 20 ஆண்டுக்கு பின் மீண்டும் தொழில்முறை போட்டிக்கு திரும்பி உள்ளார் மைக் டைசன். இந்நிலையில் இன்று (நவம்பர்.16) டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், குத்து சண்டை போட்டி நடந்தது. இதில் 58 வயதான மைக் டைசன், 31 வயதான […]
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமிபாய் கல்லூரியின் பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தின் போது பிறந்த குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் 52 முதல் 54 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவ கல்லூரி தெரிவித்துள்ளது. விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அவினாஷ் குமார்,மகாராணி லட்சுமிபாய் மருத்துவ கல்லூரியில் பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை […]
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16-ம் தேதி தேசிய பத்திரிக்கை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. தேசிய பத்திரிக்கை தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊடகவியலாளர்களின் இடைவிடாத முயற்சிகளுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தேசிய பத்திரிகையாளர்கள் தினமான இன்று, உண்மையையும் பொறுப்புணர்வையும் நிலைநிறுத்தும் ஊடகவியலாளர்களின் இடைவிடாத முயற்சிகளுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். அதிகரித்து வரும் சகிப்பின்மைக்கு மத்தியில், பத்திரிகையாளர்களின் தைரியம், […]
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி தீபாவளியன்று அமரன் படம் வெளியானது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த படம், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது.இப்படத்தில் முகுந்த் வேடத்தில் சிவகார்த்திகேயனும், அவருடைய மனைவி இந்து ரெபேக்கா வேடத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இப்படம் இதுவரை ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இந்த படம் அனைவராலும் பாராட்டப்பட்டபோதிலும், ஒரு சில எதிர்ப்புகளும் கிளம்பி […]
மோடியின் மிரட்டலுக்கு பயந்து இஸ்லாமிய மக்களை ஏமாற்றுகிறார் ஸ்டாலின்; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்
இஸ்லாமிய மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்தி தர வேண்டும், தேர்தல் நேரத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ் டி பி ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் சென்னை எழும்பூரில் பேரணி நடைபெற்றது. எல்.ஜி. சாலையில் தொடங்கிய இந்த பேரணி ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே நிறைவடைந்தது. பின்னர் நடைபெற்ற கண்டன […]