எந்த ஜானருகுள்ளையும் `நிறங்கள் மூன்று’ படத்தை அடக்கிட முடியாது: நடிகர் அதர்வா

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற திரைப்படம்`நிறங்கள் மூன்று’. அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உட்பட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் நவம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய அதர்வா, கார்த்திக் நரேனோட `துருவங்கள் பதினாறு’ திரைப்படம் எனக்கு பிடிக்கும். அவர் ஒரு சுவாரஸ்யமான இயக்குநர். அவர் ஒவ்வொரு காட்சியையும் எடுக்கிற விதம் ரொம்பவே தனித்துவமாக இருக்கும். இந்த படத்தோட கதையை நான் படிச்சதும் எனக்கு பயம் வந்தது. நான் நிதர்சனத்துல எப்படி இருக்கேனோ, அதற்கு அப்படியே நேரெதிரானது இந்த படத்தோட கதாபாத்திரம். அந்த பயத்துக்கு பிறகு கார்த்தி நரேன் மேல வச்ச நம்பிக்கைல படத்துக்கு ஓகே சொல்லிட்டேன்.
இந்தப் படம் ரொம்ப வித்தியாசமான படம். எந்த ஜானருக்குள்ளவும் இந்த படத்தை அடக்கிட முடியாது. சரத்குமார் சார்கூட இப்போதான் முதல் முறையாக சேர்ந்து நடிக்கிறேன். அதுவும் ஒரே ஒரு நாள்தான் அவர் கூட காம்பினேஷன் ஷாட் இருந்தது. ஒவ்வொரு நாளும் பூமா தேவி மேல பாரத்தை போடுற மாதிரி கார்த்திக் மேல பாரத்தை போட்டு போய் நடிச்சிடலாம்னு தோணும். இப்போ நல்ல படத்தை உங்களுக்கு கொடுத்திருக்கோம்னு நம்புறேன். படத்துல ஒரு சண்டை காட்சில முழுவதுமாக நடிச்சிட்டேன். எடிட்ல வந்து பார்க்கும்போது அது அப்படியே ரிவெர்ஸ்ல இருக்கு. இந்த மாதிரி பல புதுமையான விஷயங்கள் படத்துல இருக்கு. இவ்வாறு அதர்வா கூறினார்.
